தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஆ.இராசா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து காண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக