ஞாயிறு, 3 டிசம்பர், 2023

தமிழன் - திராவிடன் இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்திதாசர்!

   

அவரின் 175 ஆம் ஆண்டில் மணிமண்டபம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

v3

சென்னை,செப்.3- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருவள்ளுவர்அவ்வையார்கபிலர்வள்ள லார் வரிசையிலே தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த் தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்தி தாசப் பண்டிதர் அவர்களின் பெருமையைப் போற்றக்கூடிய அறிவிப்பு ஒன்றை, 110 ஆவது விதியின்கீழ் இந்த மாமன்றத்தில் எடுத்து வைப் பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில்இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது.  ஒன்றுதமிழன்இன்னொன்றுதிராவிடம்இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான்அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.

1881 ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக் கெடுப்பில் 'பூர்வத் தமிழர்என்று பதியச் சொன் னவர் பண்டிதர் அவர்கள்.  1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் 'திராவிட மகாஜன சபைஎன்பதாகும்.  1907 ஆம்  ஆண்டு 'ஒரு பைசாத் தமிழன்என்ற இதழைத் தொடங்கிஅதையே 'தமிழன்என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர். 'பூர்வீக ஜாதிபேதமற்ற திராவிடர்காள்என்று அழைத்தவர் அவர்அதனால்தான் தமிழன்திராவிடம் ஆகிய இரண்டு சொற்களையும் அறி வாயுதமாக அவர் ஏந்தினார் என்று குறிப்பிட்டேன்அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது.

எழுத்தாளர்ஆய்வாளர்வரலாற்று ஆசிரியர்மானுடவியல் சிந்தனையாளர்பதிப்பாளர்பத்திரி கையாளர்மருத்துவர்பேச்சாளர்மொழியியல் வல்லுநர்பன்மொழிப் புலவர்புதிய கோட் பாட்டாளர்சிறந்த செயல்பாட்டாளர்சளைக்காத போராளி எனப் பன்முக ஆற்றலைக் கொண்ட வர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்அவரது தாத்தா கந்தப்பன் அவர்கள்தன்னிடம் இருந்த திருக்குறள் ஓலைச் சுவடிகளை எல்லீஸ் அவர்களிடம் கொடுத்துதிருக்குறளை அச்சுப் பதிப்பாக கொண்டுவந்ததை நினைக்கும்போதுகுறளுக்கு அவருடைய குடும்பம் ஆற்றிய தொண் டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களே, “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும்சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்என்று குறிப்பிட்டிருக்கிறார்அதனால்அவர் சொன்னதைத்  தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  ‘‘இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு ஜாதியும் மதமுமே தடை'' என்று சொன்ன அயோத்திதாசர், ''மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோஅவர்தான் மனிதர்என்று முழங்கினார்.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய  175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாகவும்அவரது அறிவை வணங்கும் வித மாகவும்வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடு வதில் இந்த அரசு பெருமைப்படுகிறது.

மகான் புத்தரை 'இரவு பகலற்ற ஒளிஎன்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதர் அவர்களு டைய சிந்தனைகளும்இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்று சொல்லி அமைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக