தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை



  January 08, 2023 • Viduthalai

 ராமன் பாலம் என்ற ஒன்று கிடையாது என்று  ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டுவிட்டாரே!

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்; ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிட்டுமே!

பாலு வழிகாட்டியுள்ளார்; வரலாற்றைப் பதிவு செய்வீர்!

‘‘பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

சென்னை, ஜன.8 ராமன் பாலம் என்ற ஒன்று கிடை யாது என்று ஒன்றிய அமைச்சரே ஒப்புக் கொண்டு விட்டாரே! சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிட்டுமே! பாலு வழிகாட்டியுள்ளார்; வரலாற் றைப் பதிவு செய்வீர்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘பாதை மாறா பயணம்‘‘  நூல் வெளியீட்டு விழா

நேற்று (7.1.2023)  மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அவர் கள் எழுதிய ‘‘பாதை மாறா பயணம்‘‘ நூல் வெளியீட்டு விழாவில்,   நூலின் முதல் தொகுதி யினைப் பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் ஒரு நூல் வெளியீட்டு விழா - அதுவும் தன்வரலாறு என்ற சாதனைக் களஞ்சியமாக அமைக்கப்பட்டு இருக்கக் கூடிய ‘‘பாதை மாறா பயணம்”  என்ற தலைப்பில், மாறாத பாதையை என்றைக்கும் தேர்ந்தெடுத்து, அந்த வகையில், ஓர் அற்புதமான தலைப்பினையும் தந்து, ஏறத்தாழ 1400 பக்கங்களுக்குமேல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டு இருக்கின்ற தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா - நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிகு பொருளாளர் அருமைச் சகோதரர் மானமிகு மாண்புமிகு டி.ஆர்.பாலு அவர்கள் எழுதிய இந்த நூலின் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை தாங்கியிருக்கின்ற இந்தி யாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று இன எதிரிகளால்கூட, பத்திரிகைகளால்கூட பாராட்டப்படக் கூடிய ஒப்பற்ற திராவிட மாடல் ஆட்சியை இன்றைக் கும் நடத்தி, உலகப் புகழ் திராவிடத்திற்கு உண்டு என்று காட்டக் கூடிய பெருமைமிகு  எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியினுடைய தலைவர் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக உரை யாற்றி அமர்ந்துள்ளவரும், இரண்டாவது பாகத்தைப் பெற்றுள்ளவருமான கவிப்பேரரசு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக வாழ்த்துரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு மானமிகு சகோதரர் துரைமுருகன் அவர்களே,

அனைவரையும் வரவேற்று உரையாற்றிய அருமைக் கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்களே,

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சார்பாக, இளைஞர் களின் சார்பாக சிறப்பாக உரையாற்றிய மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அன்பிற்குரிய திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களே,

இந்நிகழ்வில், சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி கொள்கையாளராக இருந்து, கூட்டணியில் நேரிடையாக இல்லாவிட்டாலும், இன எதிரிகளுக்கு சிறப்பாகப் பதில் சொல்லிக் கொண் டிருக்கின்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் பேரா சிரியர் சுப.வீ. அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தோழர், தியாகச் செம்மல் என்று சொல்லலாம்; 49 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எல்லாம் மிசாவில் சிறையில் இருந்தபொழுது,  சிறையில் இருந்தவர்கள் பட்டபாட்டை, இன்றைக்கும் நம்முடைய சகோதரர் ஆற்காடு வீராசாமி அவர்களைப் பார்க்கின்ற நேரத்தில், அந்த உணர்விற்கு ஆளாகியிருக்கின்றோம்; அப்படிப் பட்ட உணர்வு படைத்த திராவிட முன்னேற்றக் கழகத் தின் முக்கிய பொறுப்பாளரான அருமைச் சகோதரர் ஆற்காட்டார் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர்களே, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, அருமைத் தோழர்களே, வெளியீட்டாளரான ஆழி செந்தில்நாதன் அவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு பாகங்களைப்பற்றி இங்கே அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக அதைப்பற்றிய விளக்கத்தையும் எடுத்துச் சொல்லவிருக்கின்றார்கள்.

பாலு அய்யரா?

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். இங்கே கவிஞர் அவர்கள்கூட சொன்னார்கள்; முதல் பாகத்தை நான் படித்து முடித்து, பெற்றிருக்கின்றேன். இரண்டாவது பாகத்தை அவர் பெற்றிருக்கிறார். இரண்டு பாகங் களையும், இரண்டு பேரும் படித்திருக்கின்றோம். அதைப்பற்றி சொல்லவேண்டுமானால், ஓர் ஆய்வரங் கமே நடத்தலாம்.

அதைவிட ஒரு முக்கியமான அம்சம் என்ன வென்றால், எனக்கு இப்பொழுது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது - தளிக்கோட்டையில் டி.ஆர்.பாலு அவர்கள் இளைஞராக படித்துக் கொண் டிருந்தபொழுது பார்த்தபொழுது, பாலு அய்யரை நான் பார்த்ததில்லை.

பாலு அய்யர் எப்படி நம்முடைய இயக்கத்திற்கு வந்திருக்கிறாரே, என்று மிகப்பெரிய அளவிற்குப் பார்த்தனர். பிறகு, அவருடைய பரிணாம வளர்ச்சியில் வரிசையாக வருகிறபொழுது, பாலசுப்பிரமணியம், பிறகு கலைஞரால், டி.ஆர்.பாலு என்று அவர்கள் ஆக்கப்பட்டு, அதைத்தான் நண்பர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல, மிக முக்கியமாக நிரந்தரமாக ஆகியிருக்கிறது.

எத்தனையோ செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவர் முதன்முதலில் திருப்பாலக்குடி என்ற அவருடைய ஊருக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஊரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பொதுக்கூட்டத்திற்குச் சென்று பார்த்திருக்கிறார்; அய்யா அவர்களைப் பார்த்த நேரத்தைவிட, அய்யா அவர்களின் பக்கத்தில் இருந்த நாயைப் பார்த்து, அவர் பயந்துகொண்டே அப்படியே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்ததால், பள்ளிக்கூடம் போவதற்குத் தாமதமாகி விட்டது.

‘பள்ளிக்கு ஏன் தாமதம்?’ ஆசிரியர் கேள்வி

பள்ளிக்குச் சென்றதும், அவருடைய ஆசிரியர் கேட்கிறார்,   ‘‘ஏன் பள்ளிக்கூடத்திற்குத் தாமதம்?’’ என்று.

அவர் சொன்னார், ‘‘பெரியாருடைய கூட்டம் நடை பெறுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால், நான் தாமதமாக வந்தேன்’’ என்று சொன்னார்.

‘‘சரி, சரி, அடிக்கடி பெரியார் கூட்டத்தைக் கேளுங்கள்'' என்று, அந்த ஆசிரியர் இன்னும் அதிகமாக அவரை ஊக்கப்படுத்தினார்.

அன்றைக்குத் தொடங்கிய அவருடைய பயணம் என்பது, இன்றைக்கும் - நாளைக்கும் - என்றைக்கும் ஒரே பாதையில் என்ற பெருமைக்குரிய பயணமாக இருக்கிறது. அதைத்தான் நாம் பாராட்டவேண்டும்.

எத்தனையோ சோதனைகள் -இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில், இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரையில், அதாவது தன் வரலாறு என்பது இருக்கிறதே, அது வெறும் சம்பவக் கோர்வை அல்ல. தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றதை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.

மாறாக, இங்கே வெளியிடப்பட்ட  1400 பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதிகளையும் படித்தால், என்ன தெரிந்துகொள்ளலாம் என்றால், திராவிட இயக்கத் தினுடைய வரலாற்றை - ஏறத்தாழ 60 ஆண்டுகால வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும்!

அதேபோல, திராவிட இயக்கத்திற்குக் குறிப்பாக என்னென்ன சோதனைகள் ஏற்பட்டன? அதைத் தெரிந்துகொள்ளலாம். அதைவிட எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபொழுது, என்னென்ன சங்கடங்கள் ஏற்பட்டன? சாதனைகள் பின்னால் வருகின்றன; சோத னைகளைத் தாண்டியிருக்கின்றோம் என்பதையெல்லாம் அவர் பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறார். ஒரு சம்ப வத்தைக்கூட விடவில்லை. இதில் கொள்கை உறவுகள், குடும்ப உறவுகள், இப்படி எல்லா உறவுகளைப்பற்றியும் அவர் எடுத்து, ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்.

இங்கே நம்முடைய பொதுச்செயலாளர் துரை முருகன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, ‘‘சம்பவங்கள் இயக்கத்தால் பதிவு செய்யப்படவேண்டும்‘‘ இந்த இயக்கத்தில் அப்படி எழுதக்கூடிய தோழர்கள் ஏராளம் இருக்கின்றார்கள்.

ஏனென்றால், இந்த இயக்கம் சிலர் நினைப்பதுபோன்று, சாதாரணமாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

பலவகையான சங்கடங்கள்; பல வகையான எதிர் நீச்சல்கள்  இவற்றையெல்லாம் சந்தித்துத்தான் இன் றைக்கு இந்தக் கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள்.

இந்த ஆட்சியை சோதித்துப் பார்க்கலாம்; குறுக்குச் சால் ஓட்டிப் பார்க்கலாம்; போட்டி அரசாங்கத்தை நடத்திப் பார்க்கலாம்; தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு, இதை ஆட்டலாம், அசைக்கலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களுடைய இந்த எண்ணம் ஒரு போதும் இந்த நாட்டில் ஈடேறாது.

அதற்குரிய பாடத் திட்டம் - எச்சரிக்கை போன்றது தான் இங்கே வெளியிடப்பட்ட நூல்கள்.

ஏன் இந்தப் புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றால், அவருடைய சாதனைகளைப்பற்றி மட்டும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல; எல்லாவற்றையும் தாண்டி, இறுதியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று சொல்லக்கூடிய - நம்பிக்கை ஊட்டக்கூடியதற்கு இதுபோன்ற நூல்கள் பயன்படு கின்றன.

எத்தனையோ செய்திகள் உள்ளன; ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன்.

சேது சமுத்திரத் திட்டம் நமது முக்கிய பிரச்சினை

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - 150 ஆண்டுகால கனவுத் திட்டம் என்று கருதப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களால் ‘‘எழுச்சி நாள்’’ என கொண்டாடப்பட்ட போராட்டம்; நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இதற்காகவே மிகப்பெரிய அளவிற்கு போராட்டங்களையெல்லாம் நடத்தி, பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றிய ஆட்சியில் அங்கம் வகித்தபொழுது, கப்பல் துறைதான் வேண்டும் என்று கேட்டு வாங்கி, அதை யார் பொறுப்பாக செய் வார்கள் என்று யோசித்து, அந்தப் பொறுப்பை நம்மு டைய சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களிடம் ஒப்படைத்து, சீக்கிரமாக செய்து முடிக்கவேண்டும் என்று சொன் னார்கள்.

அதற்கான நிதி ஆதாரம் ஏராளம் இருக்கின்ற நிலை என்றாலும்கூட, அதற்கு சேது சமுத்திரக் கால்வாய் கழகம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, சொந்தமாக அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தும் ஆற்றல் ஒருவருக்கு- டி.ஆர்.பாலுவுக்கு உண்டு என்பதை அவர் பதிவு செய்திருக்கின்றார் என்றால், இந்த இயக்கம் எப்படிப்பட்டவர்களைப் பெற்றிருக்கிறது என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

வெறும் சாதாரண கொள்கைப் பிரச்சாரகர்களை மட்டும் திராவிட இயக்கம் பெற்றிருக்கவில்லை. ஆற்றலாளர்களைப் பெற்றிருக்கின்றது என்பதற்கு அடையாளம். அந்தத் திட்டத்திற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்டு, அந்தத் திட்டத்தால், பயண காலம் 400 மைல் மிச்சமாகக் கூடிய நிலையில், இலங்கை முழுவதும் சுற்றிவரக்கூடிய நிலையில் மாற்றங் கள் பெற்று, மிகப்பெரிய அளவிற்கு பயன்பெறலாம் என்ற நிலையில்,  மக்கள் வரிப் பணம் செலவழிக்கப்பட்ட நேரத்தில், இன்னும் 23 கிலோ மீட்டர்தான் மீதம் இருக் கிறது இந்தத் திட்டம் முடிவதற்கு என்று சொல்லும் பொழுது, குறுக்கே இராமனைக் கொண்டு வந்தார்கள்.

‘‘எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்?’’

இராமர் பாலம் என்ற ஒன்றைச் சொல்லி, பக்தியைக் காட்டினார்கள். இந்தத் திட்டத்தை முதலில் ஆதரித்த வர்கள், பின்னாளில் ஏன் எதிர்த்தார்கள்? இந்தப் பெருமை தி.மு.க.விற்கு வந்துவிடக் கூடாது; இந்தப் பெருமை கலைஞருக்கு வந்துவிடக் கூடாது; இந்தப் பெருமை யு.பி.ஏ. அரசாங்கத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

இந்தத் தொலைநோக்குத் திட்டம் நிறைவேறியிருந்தால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு எத்தனையோ ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.

இன்றைக்கு இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதற்காக ஏராளமான திட்டங்களை வகுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்களே, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - ஆதாம் பாலம் என்று சொல்லி, இராமர் பாலம் என்று சொல்லி, அதைத் தடுத்து  நிறுத்தியிருக்காவிட்டால், இன்றைக்குத் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு எத்தனையோ லட்சம் பேருக்கு வேலை கிட்டியிருக்கும்.

இவற்றையெல்லாம் துணிவாக எழுதியிருக்கிறார் இந்த புத்தகத்தில். இதற்காக 60 பக்கங்களை அதற்காகவே செலவழித்திருக்கிறார்.

எனவே, இதுபோன்ற ஒவ்வொரு திட்டங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 

ராமர் பாலம் என்பது இல்லை - ஒன்றிய அமைச்சரே ஒப்புதல்

அன்றைக்கு இராமரைக் கொண்டு வந்து, அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டீர்களே, இன்றைக்கு என்ன நிலை? உண்மை எந்தப் பக்கம் இருக்கிறது?

இன்றைய பா.ஜ.க. ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில், நாடாளுமன்றத்தில்  கேள்வி கேட்டபொழுது, ஒன்றிய அமைச்சர் அதற்குப் பதில் சொல்கிறார்,

‘‘இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது’’ என்று.

இப்பொழுது வெற்றி பெற்றவர்கள் யார்?

திராவிட இயக்கத்தவர் அல்லவா!

இன்னமும் ஏன் அந்தத் திட்டத்தைத் தடுத்துக் கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் இப்பொழுது பிரச்சினை.

இவற்றையெல்லாம் கேட்கிறோம் என்பதற்காகத் தான், இப்பொழுது, ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்; ‘தமிழகம்‘ என்று சொல்லுங்கள் என்கிறார்கள்.

அதில்கூட ஒரு பிரிவினை மனப்பான்மை. இரண்டு பேரையும் மோத விடுகிறார்கள்.

தமிழ்நாடு என்றால் பிரிவினையா?

தமிழ்நாடு என்று சொன்னால், பிரிவினை மனப் பான்மை என்று சொல்வதற்கு இவர் யார்?

பேரறிஞர் அண்ணா அவர்கள், மிகத் தெளிவாக ‘‘கவர்ன்மென்ட் ஆஃப் தமிழ்நாடு’’ - தமிழ்நாடு அரசு என்றார். 

வெறும் சம்பளம் வாங்கக்கூடிய ஓர் ஊழியர், தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று சொன்ன நேரத்தில், அதற்கு முதல் பதிலடி எங்கே இருந்து வந்தது என்றால், அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர் களிடமிருந்துதான். மிகத் தெளிவாக, உடனடியாக அதற்கான பதிலைச் சொன்னார்கள்.

அந்த வகையில்தான், ஒரு கொள்கை வீரருடைய பயணம் இது. பாதை மாறாத பயணம் இருக்கிறதே - அது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில்கூட, பாதையை மாற்றத் தேவையில்லை என்று அவர்களே சொல்லக் கூடிய அளவிற்கு, இன்றைக்கு ஒப்புக்கொண்டிருக் கிறார்கள்.

எனவேதான், இது வெறும் வாழ்க்கை வரலாறு நூல் அல்ல நண்பர்களே! இது ஓர் இயக்கத்தின் வரலாறு - அரசியலின் வரலாறு - கொள்கை வெற்றியினுடைய வரலாறு.

இப்படிப்பட்ட நூல்களைப் படிக்கவேண்டும்; இந்த நூல்கள் பரவினால்தான், ‘நூல்’களின் அட்டகாசம் அடங்கும் - அதுதான் மிகவும் முக்கியமானது; அதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சரியான காலகட்டத்தில், இந்த நூல் பயன்படக் கூடிய அளவிற்கு இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இன்றைக் கும் நம்முடைய எழுச்சிக்கு இதுபோன்ற நூல்கள் தேவை.

‘‘பதவி என்பது மேல்துண்டு; கொள்கை என்பது வேட்டி!’’ அண்ணா சொன்னார்!

கொள்கையில் நாம் சமரசம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. அதை இங்கே வெளியிடப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் மிக அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நூலில் உள்ள ஒன்றை மட்டும் சொல்கிறேன்; பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னதை, ஓர் அருமையான பகுதியை இங்கே அவர் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

உண்மையான கொள்கைப்பற்று என்பது எது?

‘‘பதவிகள் வரும், போகும்; ஆனால், கொள்கை என்பது மாறாதது; மாறக்கூடாது’’ அதுதான் முக்கியம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குப் பாடமாக எடுத்துச் சொன்ன பகுதி, 

‘‘பதவி என்பது ஒருவருக்கு மேல் துண்டு; ஆனால், கொள்கை என்பது வேட்டி போன்றது’’ என்றார்.

அந்தக் கொள்கைகளைத் தெளிவாகச் சொல்லக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் எழுத்தைவிட, அவருடைய செயல்கள் எப்படித் தெளிவாக உருவாகியிருக்கிறது; அவரை சிந்திக்க வைத்திருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளம்.

அவர் ஒன்றிய அமைச்சராக இருந்தபொழுது செய்த இந்தியாவிலுள்ள சாலைகளின் சிறப்பைப் பற்றிச் சொன்னார்கள்; இங்கே இருக்கக்கூடிய சாலைகளின் பெருமைகளைச் சொன்னார்கள்; இன்னமும் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய சாலைகளின் பெருமைகளையும் எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், இவையெல்லாம் சிறப்பாக இருக்கிறது - கலைஞர் அவர்கள் பாராட்டினார் என்பதைப்பற்றியெல்லாம் இங்கே எடுத்துச் சொன் னார்கள்.

நண்பர்களே, நான் இப்பொழுது சொல்கின்ற தகவலை நன்றாக கவனிக்கவேண்டும்.

சிறீபெரும்புதூரில் மறுபடியும் வெற்றி பெறுகிறார். அப்படி வெற்றி பெற்ற அவருக்கு, அமைச்சர் பதவி இல்லை.

அதற்குப் பிறகு என்ன அவர் இயக்கத்தைவிட்டு ஓடிவிட்டாரா? இயக்கம் வேண்டாம் என்று போய் விட்டாரா? சங்கடப்பட்டாரா?

இந்த இடத்தைத்தான், இந்தப் புத்தகத்தில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது - பெற்றுக்கொண் டால் மட்டும் போதாது நண்பர்களே - கற்றுக்கொள்ள வேண்டிய பகுதி இருக்கிறது.

பதவிகள் வரும், போகும். கொள்கைகள் நிலைக்கும். பாதை மாறவேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவாக நினைத்தார்.

ஏனென்றால், ஒரு தலைமை, சில முடிவுகளை எடுக்கின்றபொழுது, சில வாய்ப்புகளை சிலருக்குக் கொடுப்பார்கள் - சில நேரங்களில். அதற்குரிய காரண காரியங்களை, பல நேரங்களில் வெளிப்படையாகச் சொல்ல முடியாது; சொல்லத் தேவையும் இல்லை.

ஆனால், தொண்டர்கள், தோழர்கள் என்பவர்கள், பின்பற்றுபவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய பெருந்தன்மை இருக்கிறதே, அதுதான் உண்மை யான கொள்கை என்பது மிக முக்கியமானதாகும்.

தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார்,

''ஒருவருக்கு உதவிகள் கிடைக்கும்பொழுது, அதுவும் அவரும் விரும்புவது கிடைக்கும்பொழுது, அவர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது முக்கியமல்ல; அவர் விரும்பியது கிடைக்காதபொழுது, எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது; அதை வைத்துத்தான் அந்த மனிதரை அளக்கவேண்டும்‘‘ என்று சொல்லுவார்.

அந்த வகையில் பார்க்கும்பொழுது, தோழர், சகோதரர் பாலு அவர்கள் சாதாரண மனிதர் அல்ல; ஒரு மாமனிதர் என்பதை, அந்த வாய்ப்புகளில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்தப் பகுதியில் என்ன அவர் எழுதப் போகிறார் என்று கவனத்துடன் நான் படித்துக்கொண்டே வந்தேன். மற்ற வரலாறுகளையெல்லாம் பதிவு செய்துகொண்டு வருகிறாரே, இந்தக் காலகட்டத்தை அவர் எப்படி கையாளப் போகிறார்? ஏனென்றால், இவ்வளவு திறமை உள்ளவருக்கு வாய்ப்பில்லை என்று மற்றவர்கள் சங்கடப்பட்டார்கள்; அது உண்மை; அந்தக் காலகட்டம் எங்களுக்கும் தெரியும்.

ஆனால், அந்த நேரத்தில்கூட, அமைதியாக, நான்கு வரிகளில் தாண்டிவிட்டு, ‘‘என்னுடைய கடமையை நான் செய்கிறேன்; என்னுடைய கொள்கையை நான் செய் கிறேன்” என்று, கலைஞரிடத்தில் தோளோடு தோளாக நின்றார்.

அதுதான் ஒரு நல்ல தொண்டன்

அதுதான் ஒரு நல்ல பணியாளன்

அதுதான் ஒரு நல்ல கழகத்துக்காரன்

அதுதான், திராவிட இயக்கத்தின் தன்மை

எனவே, இந்த இயக்கத்தை நீங்கள் மாற்றலாம்; அசைக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற முழக்கம்!

இது தமிழ்நாடு! தமிழ்நாடு!! தமிழ்நாடு!!! என்று சொல்லி,

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றைச் சொல்லு கிறேன், அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றுகின்ற நேரத்தில், சட்டமன்றத்தில் அண்ணாவே சொன்னார், சட்டமன்றத்தினுடைய வரலாற்றில், ‘‘தமிழ்நாடு என்று நான் குரல் கொடுக்கிறேன்; வாழ்க என்று நீங்கள் சொல்லுங்கள்’’ என்று அண்ணா அவர்கள் சொன்னார், எந்த ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பும், அந்த சட்டத்திற்கு, இப்படி ஒரு குரல் கொடுத்து எந்த ஒரு முதலமைச்சரும் நிறைவேற்றவில்லை. அதுதான் சிறப்பானது, சட்டமன்ற வரலாற்றில்.

அதை மாற்றிவிடலாம் என்று நீங்கள் நினைக் காதீர்கள்.

நாடு என்று சொன்னால், உடனே, அது பெரிய அளவிற்குப்  பிரிவினையாம்!

நாடு என்ற சொல் வந்தாலே, பிரிவினையாகிவிடுமா?

இன்றைக்குக்கூட ‘விடுதலை’யில் ஒரு பெட்டிச் செய்தி போட்டிருக்கிறோம்.

பைத்தியக்காரர்களே, பக்தர்களே நீங்கள் என்ன பாடுகிறீர்கள்?

‘‘தென்னாடுடைய சிவனே போற்றி!’’ என்பதில் நாடு வரவில்லையா?

‘‘தென்னாடுடைய சிவனே போற்றி!’’ என்று.

தென்னாடு என்று சொன்னால், பிரிவினையா?

அப்படி பாடியவர்கள்மீது கிரிமினல் வழக்குப் போடுவீர்களா?

ஊர்களுக்குக்கூட பெயர் வைத்திருக்கிறார்களே, தஞ்சை மாவட்டத்திற்குள் சென்றால் தெரியுமே! ஒரத்த நாடு, வல்லநாடு என்று இருக்கிறதே, அந்த ஊர்ப் பெயரையெல்லாம் மாற்றுவார்களா? அந்த ஊர் பிரிவினை ஊர் என்று ஆகிவிடுமா?

எனவேதான், இந்தப் பூச்சாண்டிகளை இங்கே காட்டாதீர்கள். உங்களை அனுப்பவேண்டிய அளவிற்கு இந்த நாடு தயாராக இருக்கிறது; தமிழ்நாடு தயாராக இருக்கிறது.

இப்போது நண்பர்களே முழங்குங்கள், 

தமிழ்நாடு! தமிழ்நாடு!! தமிழ்நாடு!!!

(அனைவரும் ''வாழ்க, வாழ்க, வாழ்க!'' என்று முழக்க மிட்டனர்)

இதுதான் பதில், இதுதான் தொடர்ச்சி, இதுதான் அடுத்த பாகம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:46 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், நூல் வெளியீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ▼  ஜனவரி (10)
      • பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை...
      • பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச...
      • அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற...
      • தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீ...
      • வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
      • சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் த...
      • பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே...
      • நமது 'விடுதலை' நாளேட்டில் ஒரு புதிய திட்டம்! பயிற்...
      • தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும...
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ▼  ஜனவரி (10)
      • பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை...
      • பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச...
      • அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற...
      • தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீ...
      • வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
      • சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் த...
      • பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே...
      • நமது 'விடுதலை' நாளேட்டில் ஒரு புதிய திட்டம்! பயிற்...
      • தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும...
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.