தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்



  January 10, 2023 • Viduthalai

 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே!

ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்

ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை;

முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்!

சேலம், ஜன.10 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்; ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை; முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (9.1.2023) சேலத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்: முதலமைச்சர் உரையாற்றிக் கொண் டிருக்கும்போதே ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஒரு மாநில அரசினுடைய ஆளுநர் என்பவர், தன்னிச்சையாக நடப்பதற்கு, அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கின்ற அரசமைப்புச் சட்டத்தில் எந்தவிதமான அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கவில்லை.

அவர் நடந்துகொண்டிருக்கின்ற முறை, ஏற்கெ னவே வெளியிலும் சரி, இன்றைக்கு சட்டமன்றத் தொடக்க நிகழ்வில், ஆளுநர் அவர்கள் பாதியி லேயே வெளியேறியது என்பது ஜனநாயகத்தைக் கொச் சைப்படுத்துவது - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அவமதிப்பு உண்டாக்குவது - தன்னுடைய கடமை யிலிருந்து தவறிய - ஓர் அரசு ஊழியருடைய குற்றத் திற்கு அவர் ஆளாகிறார்.

இதுவரையில், தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில், இப்படி ஜனநாயகத்தைக் கொச்சைப் படுத்தக் கூடிய கீழ்த்தரமான ஒரு நிலைக்கு ஓர் ஆளுநர் சென்றதே கிடையாது.

ஆளுநர் உரையை எழுதுவது யார்?

பொதுவாக ஆளுநர் உரை என்பது, அவரால் எழுதப்படுவது அல்ல; அவர் படிக்கவேண்டிய, அரசமைப்புச் சட்டத்தின் முறையில், ஒரு தலைவர் என்ற முறையில், அவருடைய பெயரால் ஆட்சி அமைந்திருக்கிறது என்ற பெயரால், அமைச்சரவை, அதனுடைய கொள்கைகளை முடிவு செய்து, ஆளுநர் மூலம் அறிவிப்பதுதான் ஆளுநர் உரை.

உதாரணமாக, ஒன்றிய அரசில், அந்த அமைச்சரவை என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத் தொடக்க உரையில் படிப்பார். அவர் சொந்தமாகக் கருத்துகளைச் சேர்ப்பதற்கோ, நீக்குவதற்கோ அவருக்கு எந்தவிதமான உரிமையும், அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்படவில்லை. இது நீண்ட காலமாக காப்பாற்றப்பட்ட மரபும் ஆகும்.

ஆனால், அந்தக் குறைந்தபட்ச மரபைக்கூட ஆளுநர் மீறியிருக்கிறார். திராவிட மாடல் ஆட்சி என்பதோ, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் பெயர் களை விட்டுவிட்டுப் படிப்பது என்பது அதிகப்பிரசங்கித் தனமானது; தேவையற்ற ஒன்றாகும்.

இன்னுங்கேட்டால், ஆளுநர் உரை தமிழ்நாடு அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு, சட்டப்பேர வையில் ஆளுநர் படிப்பதற்கு முன்பாக, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவருடைய அனுமதியையும் பெறு வார்கள். அப்படி அந்த உரையின்மீது ஆளுநருக்கு மாறுபட்ட கருத்து இருந்தால், தனிப்பட்ட முறையில், நேரிடையாக அரசாங்கத்திற்கு அறிவிக்கவேண்டும்; சட்டப்பேரவைத் தலைவருக்குத் தெரிவிக்கவேண்டும்.

இதில் எல்லாம் எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது என்று சொல்லி, பிறகு அவர்களுக்குள் முடிவெடுக்கவேண்டும்.

அப்படி செய்யாமல், அதை விட்டுவிட்டுப் படிப்பது என்பது இருக்கிறதே, அது தவறான முன்மாதிரி; அது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தை மீறிய அவமதிப்புச் செயல். இதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஓர் ஆளுநர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட நிகழ்வு என்பது  கிடையவே கிடையாது.

ஆளுநர் செயல் - 

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமே!

ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழிக்கு இது முற்றிலும் விரோதமாகும்.

முதலமைச்சர், அமைச்சர்கள் எப்படி அரசமைப் புச் சட்டத்தின்மீது உறுதிமொழி கூறி பதவியேற் கிறார்களோ, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவில் உள்ள பகுதியை உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன்.

I solemnly affirm will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well being of the people of (name of the State)

என்று இருக்கிறது. 

அதாவது தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நான் பாடுபடுவதற்கு உறுதியேற்கிறேன்; அதைக் காப்பாற்றுவேன் என்பதுதான்.

அமைச்சர்களுக்கும், மற்றவர்களுக்கும் பதவிப் பிராமண உறுதி மொழி வாசகங்கள், அரசமைப்புச் சட் டத்தை உருவாக்கியபொழுது, அந்த வாசகங்கள் வேறு.

ஆனால், ஆளுநர் என்று வரும்பொழுது,    well being of the people - மக்களுடைய நலனுக்கு என்று அதில் தெளிவாக இருக்கிறது. இதற்கு முற்றிலும் விரோதமாக அண்மைக்காலமாக தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் நடந்து வருகிறார்.

அவர் எந்த மாநிலத்தினுடைய ஆளுநராக இருக்கிறார் என்று கேட்டால், தமிழ்நாடு என்று அதற் குத் தெளிவான பெயர், சட்டப்பேரவையிலேயே பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் மாற்றப்பட்டு, அது ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இன்றைய ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள், அதை மாற்றி, தமிழகம் என்று சொல்ல வேண்டும்; தமிழ்நாடு என்று சொன்னால், பிரி வினையை உண்டாக்குவது என்று குறுக்குச்சால் விடுகிறார்.

இவையெல்லாம்கூட அவர் வெளியில் சொன்ன விஷயங்கள். ஆனால், சட்டப்பேரவையில், ஆளுநர் உரையை படிப்பது என்பது, தமிழ்நாடு அரசின் கொள்கை அறிவிப்பு. அதைத்தான் ஓர் ஆளுநர் படிக்கவேண்டும்.

பேரறிவாளன் வழக்கில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

பேரறிவாளன் வழக்கில், இந்த ஆளுநரைப்பற்றி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

எப்படி இங்கிலாந்து அரசருக்கு முடிவெடுக்க வேண்டிய உரிமை தனியாகக் கிடையாதோ - எப்படி குடியரசுத் தலைவருக்கு முடிவெடுக்கின்ற உரிமை கிடையாதோ - அதுபோன்றுதான், மாநில ஆளுநர்களுக்கும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டி, இவருக்குக் குட்டும் வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட ஓர் அனுபவத்தை அவர் ஏற் கெனவே பெற்றும்கூட, இது திட்டமிட்ட ஒரு செயல். வேண்டுமென்றே ஒரு மோதல் போக்கை உருவாக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, இயல்பாக நடக்கக்கூடாது; அதற்கு மாறாக, தாங்கள் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தவேண்டும் என்று, இதில் மட்டுமல்ல; அரசாங்கத்தினுடைய கொள்கைகள், திட்டவட்டமான கருத்துகளுக்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கின்றார்.

எனவே, இது மிகப்பெரிய ஓர் அரசியல் போராட்டத் திற்கு அவரே வழிவகுக்கிறார். அவர் ஓர் ஆளுநராக நடந்துகொள்ளவில்லை. முழுக்க முழுக்க ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரராகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

ஆளுநர் ஓர் அரசு ஊழியர் - அவ்வளவே!

அவர் ஓர் அரசு ஊழியர் (பப்ளிக் சர்வண்ட்). நம்முடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய ஒருவர். அவருக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு, வேண்டுமானால், அண்ணாமலை அவர் களின் பதவிக்கு அவர் போகலாம்; அது அவருடைய விருப்பம். இல்லாவிட்டாலும், ஓர் ஆர்.எஸ்.எஸ். காரராக இருந்து செய்யலாம்; அது அவருடைய விருப்பம். தனிப்பட்ட முறையில், ஆர்.என்.இரவியாக அவர் இதுபோன்ற கருத்தைச் சொல்வதில், எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. அதை நாங்கள் சந்தித்துக் கொண்டிருப்போம்.

ஆனால், முழுக்க முழுக்க மக்களுடைய வரிப் பணத்தை சம்பளமாகப் பெறக்கூடிய ஒருவர், ஆளு நராக இருந்துகொண்டு, சட்டப்பேரவை மரபுகளை யெல்லாம் குழிதோண்டி புதைப்பது - அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழிக்கு விரோதமாக நடந்துகொள்வது என்பது கண்டனத்திற்கு உரியதாகும். மக்கள் போராட்டம் வெடிக்கும்!

ஏற்கெனவே 22 மசோதாக்களை ஆளுநர் அவர்கள் நிலுவையில் வைத்திருக்கிறார். அந்த மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பவேண்டும்; அல்லது அதற்குரிய காரணங்களை அரசிடம் கேட்கவேண்டும். அப்படி அவர் செய்யவில்லை.

ஆன்-லைன் சூதாட்டத்தினால், ஒவ்வொரு நாளும் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதைப் பற்றி அவர் கவலைப்படாமல், அதற்கு மாறாக,  வேண்டு மென்றே இப்படிப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கு கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எங்கெல்லாம் பா.ஜ.க. ஆளவில்லையோ, அங்கெல் லாம் தங்களுக்கு வேண்டப்பட்டவரை ஆளுநராகப் போடவேண்டியது; அந்த ஆளுநர், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக நடந்துகொள் கிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸின் திட்டமாக இருக் கிறது.

ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரக்கூடாது!

தமிழ்நாட்டிற்குப் போடப்பட்ட ஆளுநர்தான் மிக மிக மலிவாக, அருவெறுப்பாக நடந்துகொள்கிறார். அவர் அவமதிப்பது ஜனநாயகத்தை - அரசமைப்புச் சட்டத்தை; தன்னுடைய கடமையிலிருந்து வழுவியிருக்கிறார் ஆளுநர்.

எனவே, ஒரு நாள்கூட, ஒரு நொடிப் பொழுதுகூட ஆளுநராக நீடிக்க அவருக்குத் தகுதியில்லை என்பது மக்களுடைய எண்ணம்.

செய்தியாளர்: குடியரசுத் தலைவருக்கு என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்?

தமிழர் தலைவர்: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்பொழுது,  பிரதமர் மோடி தலைமையில் உள்ள அமைச்சரவை, ஒரு உரையைத் தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவர். அதை அவர் நாடாளுமன்றம் தொடங்கும்பொழுது, அப்படியே படிப்பார், அவ்வளவுதான்.

படிப்பதை பாதியில் விட்டுவிட்டுச் செல்வதோ, உரையில் இருப்பதை விட்டுவிட்டுப் படிக்கவோ முடியாது. அது பெரிய அளவில் இருப்பது.

முதலமைச்சர் தீர்மானம் - 

ஆளுநர் பதவிக்கு அவமானம்!

இது மாநில அளவில் நடப்பது. இதுவரையில் எந்த மாநிலத்திலும் இப்படி நடைபெற்றது இல்லை.

முதலமைச்சர் அவர்கள் தெளிவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்றால், ஆளுநருக்கு இதைவிட அவமானம் வேறு கிடையாது. இதையும் தாண்டி அவர் பதவியில் நீடிப்பது என்பது - அவர் மான, அவமானத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார் என்பதைவிட, அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து அவர் தவறியிருக்கிறார்.

எனவே, அவரை இனி ஆளுநர் பதவியில் துளியும் கூட அனுமதிக்கக் கூடாது. மக்கள் போராட்டம் வெடிக் கும்.

செய்தியாளர்: தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் திட்டங்களை வேறு கோணங்களில் இங்கே செயல் படுத்துகிறார்கள் என்று அரசு ஊழியர்களே குற்றம் சாட்டியிருக்கிறார்கள்; குறிப்பாக அவுட்சோர்சிங் முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 115 அரசாணை வெளியிட்டு, அதை நீக்காமல் அப்படியே வைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டை வைத்திருக் கிறார்களே?

தமிழர் தலைவர்: அதற்கும், இதற்கும் சம்பந்தமேயில்லை. அதை சொல்வதற்கும், இந்த நிகழ்விற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

அதைப்பற்றி விளக்கம் கேட்கவேண்டியது; அதைத் தெளிவாகச் சொல்லவேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. அது தனிப் பிரச்சினை. எனவே, அதைக் கொண்டு வந்து இதில் குழப்பவேண்டிய அவசிய மில்லை. அது ஆளுநருடைய வேலையும் அல்ல.

ஒன்றிய அரசு என்ன திட்டத்தைச் சொல்லிற்று, மாநில அரசு என்ன செய்தது என்பது வேறு பிரச்சினை. அதற்குத் தெளிவான விளக்கம் சொல்வார்கள்.

ஆளுநர் என்பவர் கேள்வி கேட்கின்ற இடத்தில் இல்லை. சொந்தமாக இவருடைய கருத்தைச் சொல் வதற்கு ஆளுநருக்கு உரிமையில்லை; விட்டுவிட்டுப் படிப்பதற்கும் உரிமையில்லை.

ஒன்றிய அரசு என்ன செய்யவேண்டும்?

செய்தியாளர்: ஆளுநர்மீதான நடவடிக்கை எப்படி இருக்கவேண்டும்?

தமிழர் தலைவர்: ஆளுநர் மீதான நடவடிக்கை என்பது, ஒரு நேர்மையான ஒன்றிய அரசாக இருந் தால், தமிழ்நாட்டு ஆளுநரைத் திரும்பி அழைத்துக் கொள்ளவேண்டும். அல்லது ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்.

அவர்களுடைய திட்டம் என்னவென்றால், அய்ந்தாண்டுகள் இந்த அரசு நீடிக்கக்கூடாது; அதற்காக இப்படி ஒரு மோதல் போக்கை உருவாக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

எனவேதான், ஒன்றிய அரசு இந்த ஆளுநரைத்  திரும்பப் பெறவேண்டும். இல்லையானால், மக்கள் எழுச்சி ஏற்படும்.

செய்தியாளர்: ஆளுநர் அவர்கள், அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி வருவதின் பின்னணி என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆர்.எஸ்.எஸ். பின்னணிதான். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறுகிறது.  திராவிட மாடல் ஆட்சி உலகப் புகழ் பெறுகிறது; இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக எல்லோராலும், பத்திரிகைகளாலும் புகழப்படுகிறார்.

இந்தப் பெருமை அவருக்கு வரக்கூடாது; இந்த ஆட்சிக்குப் பெருமை வரக்கூடாது; இப்படியே நீடித்தால், தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்ற முடியாது என்பதற் காகத்தான் - இதுபோன்ற காரியங்களை செய்கிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, கேரள மாநிலத்தில் உள்ள ஓர் ஆளுநராலும் அரங்கேற்றப்படுகிறது; மேற்கு வங்காளத்திலும் நடைபெற்றது. தெலங்கானாவில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, இவ்வளவு கீழிறக்கமாக தமிழ்நாட்டு ஆளுநர்தான் நடந்துகொண்டிருக்கிறார். ஆகவே, அவர் வெளி யேறவேண்டும்; அப்படி வெளியேறாவிட்டால், வெளியேற்றப்படக்கூடிய மக்கள் இயக்கம் நடக்கும். அந்த மக்கள் இயக்கத்தில் அத்துணை பேரையும் ஒருங்கிணைப்போம்.

ஆளுநர் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறாரா?

செய்தியாளர்: பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், ஆளு நரை, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் நிர்ப்பந்தப் படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: மாநில ஆளுநருக்குச் சொந்த மாக சிந்திக்கக் கூடிய உரிமையோ, கருத்தோ சட்டப் பேரவையின் உள்ளே கிடையாது என்பதுதான் அரசமைப்புச் சட்டம்.

எனவே, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் குற்றச் சாட்டு என்பது, அரசமைப்புச் சட்டம் தெரியாதவர்கள் பேசுகின்ற பேச்சாகும்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:24 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் பேட்டி, ஆளுநர், சேலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ▼  ஜனவரி (10)
      • பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை...
      • பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச...
      • அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற...
      • தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீ...
      • வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
      • சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் த...
      • பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே...
      • நமது 'விடுதலை' நாளேட்டில் ஒரு புதிய திட்டம்! பயிற்...
      • தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும...
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ▼  ஜனவரி (10)
      • பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை...
      • பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச...
      • அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற...
      • தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீ...
      • வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
      • சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் த...
      • பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே...
      • நமது 'விடுதலை' நாளேட்டில் ஒரு புதிய திட்டம்! பயிற்...
      • தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும...
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.