தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

வெள்ளி, 6 ஜனவரி, 2023

பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே, உச்சநீதிமன்றம் வைத்த குட்டை மறந்துவிட்டீர்களா?



  January 06, 2023 • Viduthalai

இது பெரியார் மண் - 'ஆரிய பாச்சா' பலிக்காது!

ஆளுநரே உங்களுக்குரிய பணியை மட்டும் செய்திடுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


தமிழ்நாடு ஆளுநர் தனக்கென்று உள்ள அரசமைப்புச் சட்ட ரீதியான பணிகளைச் செய்யட்டும்! இது பெரியார் மண்! ஆழ்வார் மண்ணல்ல - 'ஆரிய பாச்சா' இங்கு பலிக்காது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு ஒரு மேனாள் அய்.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.இரவி என்பவரை ஆளுநராக அனுப்பியதி லிருந்து, அவர் மாநில அரசிடம் மோதல் போக்கை உருவாக்கி வருவதோடு, ஆளுநர் வேலையைத் தவிர மற்ற ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. கட்சியின் பிரச்சாரகர் போலவே செயல்பட்டு, நாளொரு மேனியும், பொழு தொரு வண்ணமும் சர்ச்சைகள் ஏற்படுத்தும் வகையில் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியைப்போல அன்றாடம் செயலாற்றி வருகிறார்! இது மகாவெட்கக்கேடு!!

அவர் தனது கடமையை ஆற்றத் தவறியவர் என்பதை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம், குட்டு வைத்ததுபோல, தனது  தீர்ப்பில் குறிப்பிட்ட பிறகும்கூட - யாருடைய தைரியத்திலோ அல்லது கண் ஜாடையிலோ, விவகாரம், வில்லங்கம் - இவற்றையே பேசி, நாளும் மக்களின் எதிர்ப்பினை மலைபோல் பெறுகின்றார்.

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் வாங்கிய குட்டு!

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சுமார் 20 மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பான ஆட்சி - முதலமைச்சர் என்று ஏடுகளால் பாராட்டப்படும் ஆட்சியை, சுதந்திர மாகச் செயல்பட விடாமல் முட்டுக்கட்டைப் போடுகிறார்!

தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதாகவே இவரது இந்த அடாவடிப் போக்கும், அவசியமற்ற சனாதனத்தைப் பரப்பிடும் பேச்சும் ஒருபுறம், பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமையால் பல மாதங்கள் ‘தலையில்லா முண்டம்போல' அப் பல்கலைக் கழகங்கள் இயங்கும் இக்கட்டான நிலை மறுபுறம்!

தற்கொலைகள் தொடரும் நிலையில், 

ஆன்-லைன் மசோதாவுக்கு 

ஒப்பம் வழங்காத ஆளுநர்!

ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை கூடிவரும் அவல நிலையைத் தடுக்க தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்ட முன்வரைவை பல மாதங்கள் ஆன நிலையில்,  அப்படியே வைத்திருப்பது கடமை தவறிய ஆளுநரின் பொறுப்பின்மை மட்டுமல்ல; மனிதாபிமானமற்ற உயிர் பறிக்கும் அலட்சியப் போக்கும் ஆகும்! அவசர சட்டத் துக்கு அனுமதி அளித்துவிட்டு, சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவைக் கிடப்பில் போடுவது எப்படி? ஏனிந்த இரட்டை வேடம்?

இந்த நிலையில், ‘‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை'' என்ற பழமொழியைபோல,

‘‘திராவிடம் - பிரிவினைவாதம்'' என்றெல்லாம் அபத்தமாகப் பிதற்றுகிறார்!  நாம் கேட்கிறோம்:

ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியின் இறுதியிலும் நாட்டுப் பண் (National Anthem)) ‘ஜனகன மன' என்று தொடங்கிப் பாடும்போது, ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நிற்கிறோமே, அதில் வரும் ‘திராவிட உத்கல வங்கா' என்றால், பிரிவினை என்று கூறி, இவர் எழாமல் நிற்பாரா?

‘திராவிடம்' அதன் வரலாற்றை ஆய்வு செய்தால், அது மக்கள் இணைந்திருக்கும் தத்துவம் - ஒன்றுபடுத்தும் தத்துவமே தவிர, பிரிப்பது அல்ல; அல்லவே அல்ல என்பது புரியும்.

‘யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் பாட்டு முதல் - ‘அனைவரும் உறவினர்' என்ற பாரதி தாசன் ஆத்திச்சூடி வரை - மக்களை ஒருங்கிணைப்பது தவிர வேறு என்ன?

வந்தேறிகளான ஆரியர்கள் ஜாதி - வர்ணம் என்று பிரித்ததுதான் பிரிவினைவாதம்!

இன்னும் ஒருபடி மேலே போய்க் கூறுவது என்றால், வந்தேறிகளான ஆரியம் மக்களிடையே - ஜாதி, வர்ணம் என்று கூறி பிறப்பினில் பேதம் கற்பித்தல் கூடாது என்று, ஓங்கி மண்டையிலடித்துக் கூறிய தத்துவம்தான் திராவிடம்.

‘திராவிடம்' என்பது அரை வேக்காட்டுத்தனமாக ஏதோ வெள்ளைக்காரர்களால் புகுத்தப்பட்ட வாதம் என்ற புனைவுரையை மறுத்து, மனுதர்மத்தில் 10 ஆவது அத்தியாயத்தில்  (மனுதர்ம சாஸ்திரத்தில் 10ஆம் அத்தியாயத்தில் ‘சங்கர ஜாதி’ என்ற தலைப்பின்கீழ் ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்கள், அனுசரிக்காதவர் களுக்குப் பிறந்தவர்கள் ‘திராவிடர்’ என்ற பெயர் கொண்டவர் என்றும், சூத்திரன் பிராமண ஸ்தீரியைப் புணர்ந்தால் பெறப்படும் குழந்தைகள் பாக்கிய ஜாதியர் என்றும், அதாவது சமீபத்தில் வரக்கூடாத ‘சண்டாள ஜாதி’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

மற்றும் பிராமணர்களுக்கு சூத்திர ஸ்தீரிகளிடத்தில் பிறந்த குழந்தைகள் ஆர்யா வர்த்த தேசத்தில் ‘செம்படவன்’ என்ற ஈன ஜாதியாகச் சொல்லப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

மற்றும் ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்ப வர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதியும், பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிற வர்களும் எச்சில் சாப்பிடுகிறவர்களுமான (பறையர்) ஜாதியும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

“திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்களாய் விட்டார்கள்” என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக் கிறது. இது மனு 10ஆம் அத்தியாயம் 44ஆம் ஸ்லோகம் ஆகும்.) 

உள்ள வரிகளை நாம் பலமுறை சுட்டிக்காட்டியும், திருந்தாத ஜென்மங்களாக காவிகள் பலர் உளறுகிறார்கள். இன்று அவர்களைப் பின்பற்றி, தமிழ்நாடு ஆளுநர் என்ற அரசுப் பணியாளர் - மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெற்று, அதில் மாளிகை வாசமும் செய்துகொண்டு இப்படிப் பிதற்றுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு அல்லவா?

நாட்டில் ஆரிய தேசம் - திராவிட தேசம் என்று முன்பு பிரித்தவர்கள், திராவிட இயக்கத்தவர்களா?

காசியில் ''ஹிந்து'' கல்லூரியை

உருவாக்கியவர் யார்?

காசியில் தற்போதுள்ள காசி ஹிந்துப் பல்கலைக் கழகம், முன்பு ‘பனாரஸ் சென்ட்ரல் ஹிந்து காலேஜ்' ஆக இருந்துதான், மதன்மோகன் மாளவியா போன்றவர்களால் பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது.

அந்த ‘ஹிந்து காலேஜில்' 1916 இல் (நீதிக்கட்சி உதயம் அந்த ஆண்டுதான்) வெளியிட்டுள்ள,

'''SANATANA DHARMA' AN ELEMENTARY TEXT BOOK OF HINDU RELIGION AND ETHICS''

என்ற பாட புத்தக நூலில், தொடக்கத்திலேயே உள்ள பகுதியை அப்படியே தருகிறோம்.

''SANATANA DHARMA means the Eternal Religion, the Ancient Law, and it is based on the Vedas, sacred books given to men many long ages ago. 

This Religion has also been called the Aryan Religion, because it is the Religion that was given to the first Nation of the Aryan race; Arya means noble, and the name was given to a great race, much finer in character and appearance than the races which went before it in the world's history. The first families of these people settled in the northern part of the land now called India, and that part in which they first settled was named Aryavarta, because these Aryans lived in it. "(The land) from the eastern ocean to the western ocean, between the two mountains (Himayan and Vindhya), the wise call Aryavarta''

ஆரிய வர்த்தத்தையும், திராவிட தேசத்தையும் (மனுநீதி கூறுகிற இதர தேசங்களை) இணைத்து ஒரே நாடு ஆக்கியதற்குக் காரணம்  பிரிட்டிஷ்காரர்களா? என்று வரலாறு அறிவு தெரிந்தவர்கள் கூறட்டும்.

பிறப்பில் பிரிவினை  - படிப்பில் பிரிவினை - 

யார் காணம்?

பிரிவினை ‘‘திராவிடமா? ஆரியமா?

அதுமட்டுமா?

படிப்பில் பிரிவினை -

உயர்ஜாதியினர் படிக்கலாம் - கீழ்ஜாதியினர் படிக்கவே கூடாது. மீறிப் படித்தால், நாக்கை அறு, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று!

மக்கள் ஜாதியில் கீழ்ஜாதிக்கும் கீழானவர்கள்.

Out Caste

பெண்கள் படிக்கவே கூடாது - அடிமைகள்தான்; இந்தப் பேதங்களை ஏற்படுத்தியது ஆரியமா? திராவிடமா? என்ற தி.மு.க. பொருளாளர், நாடாளு மன்ற உறுப்பினர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் ஆளுநர் அவர்களே?

நம்பும் கடவுளிடம் நெருங்கி பூஜை செய்வதற்குக்கூட அனைத்துப்  பக்தர்களுக்கும் உரிமை உண்டா?

ஆகமம் படித்தாலும் அர்ச்சகர் ஆகும் உரிமை கிடையாது என்று - அதை எதிர்த்து வழக்குப் போட்டு, வம்பு வளர்க்க நீதிமன்றங்களை நாடுவோர் பிரிவினை வாதிகளான ஆரியர்களா? திராவிடத்தவர்களா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விக் கணைகள் பாயவே செய்யும்!

எனவே, இனியும் பிதற்றாதீர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பாத்திரமேற்கும் ஆளுநரே!

இது பெரியார் மண்!

ஆரியப் பாச்சா பலிக்காது!

தமிழ்நாடு பெரியார் மண் - நீங்கள் உளறுவதுபோல ஆழ்வார் மண் அல்ல - 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை ‘அவாள்கள்' கையொப்பத்தோடு நிறைவேற்றி வைத்து வெற்றி பெற்ற மண்!

சமூகநீதியை விதைத்துப் பாதுகாக்கும் மண்! இங்கே சமூக அநீதி ஆரியத்தின் ‘பாச்சா' பலிக்காது!

இதனை உணர்ந்து, ஆளுநர் பணியை ஒழுங்காக செய்யுங்கள் என்று எச்சரிப்பார்கள் தமிழ் மக்கள்.

காரணம், நீங்கள் அவர்களது பணியாளர் என்பதை மறவாதீர்! கடமை துறவாதீர்!!

தமிழ்நாடு என்று அழைக்காமல், ‘தமிழகம்' என்று கூறவேண்டுமாம். இதுவே பிரித்தாளும் சூழ்ச்சிதானே - புரிந்துகொள்வீர்! ‘ஆந்திர பிரதேசம்' என்று இருக்கிறதே - ‘நாகாலேண்ட்' என்றெல்லாம் இல்லையா?

எனவே, ‘‘வெளியேறு, வெளியேறு, கடமை தவறிய ஆளுநரே, வெளியேறு!'' என்பதே இனி முழக்கமாகட்டும்!


கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.1.2023

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:59 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆரியர், ஆளுநர், திராவிடர், பதிலடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை
    சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலி...
  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • சூத்திரன்’ – பகவத் கதை பாராயணம் செய்யக் கூடாதாம்!
      மொட்டை அடித்து பார்ப்பனப் பெண்களின் சிறுநீரைக் குடிக்கவைத்து எச்சிலை நக்க வைத்த கொடூரம் அகிலேஷ் கடும் கண்டனம் வட மாநிலங்களில் பகவத்கதை கதை...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா?
    ஆரியத்தின் பொய்யும் புரட்டும் நீடிக்காது - அம்பலமாகும்! நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை ச...
  • கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா
      கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார் : பேரக் குழந்தைகள் இயக்கத்திற்கு நன்கொடை விடுதலை நாளேடு Pub...
  • மானமிகு கலைஞருடன் – ஒரு நேர்காணல்
      கேள்வி:  வணக்கம்! இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினுடைய முக்கியத் தலைவராகிய தங்களிடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 107...
  • தமிழ்நாட்டில் இல்லை, பீகாரில்! பார்ப்பனர்களுக்கு எதிரான அறிவிப்புப் பலகைகள்! பார்ப்பனர்களை வைத்து வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை: கிராம மக்கள் முடிவு!
     July 2, 2025  viduthalai புதுடில்லி, ஜூலை 2    பீகாரில் உள்ள சில கிராமங்களில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் ந...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2026 (8)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ▼  ஜனவரி (10)
      • பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை...
      • பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச...
      • அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற...
      • தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீ...
      • வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
      • சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் த...
      • பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே...
      • நமது 'விடுதலை' நாளேட்டில் ஒரு புதிய திட்டம்! பயிற்...
      • தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும...
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2026 (8)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ▼  ஜனவரி (10)
      • பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை...
      • பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச...
      • அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற...
      • தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீ...
      • வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
      • சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் த...
      • பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே...
      • நமது 'விடுதலை' நாளேட்டில் ஒரு புதிய திட்டம்! பயிற்...
      • தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும...
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.