குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பாராட்டத்தக்கது; அதேநேரத்தில் ஜாதி ஒழிப்புக்கான முக்கிய சட்டங்கள் தேவை!
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தோழர் வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்தார் என் பதற்காகப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டமைக்காகப் பாராட் டுத் தெரிவித்துள்ள - திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இந்தப் படுகொலைக்கெல்லாம் மூலவேராக இருக்கும் ஜாதி ஒழிப்புக்கான சட்டங்களைக் கொண்டு வந்து தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் வேறு ஜாதியைச் சார்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக அந்த ஜாதியைச் சேர்ந்த சில ஜாதி வெறியர்கள் திட்டமிட்டு (2015, ஜூன் 24 இல்) பள்ளிபாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப் பாளையம் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில், அந்த இளைஞரின் உடலை சடலமாகப் போட்டிருந்தனர்.
குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிப்பு!
இது தொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வன்கொடுமைச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, வழக்கு சி.பி.சி.அய்.டி. விசா ரணைக்கு மாற்றப்பட்டு, தொடர் விசாரணை வழக்கு, வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு - சென்னை உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டு, விசாரணைக்குப் பின் 5.3.2022 (ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு) குற்றவாளிகள் - சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் முதல் சுமார் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, நேற்று (8.3.2022) தண்டனை வழங்கப்பட்டது!
10 பேர் தண்டனைக்குள்ளானார்கள்; 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்!
முதல் குற்றவாளி 3 ஆயுள் தண்டனை; 15 ஆயிரம் ரூபாய் அபராதம்; மற்ற 6 பேருக்கு 2 ஆயுள் தண்டனை; 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; மற்ற இருவருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை; 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, இவர்கள் அனைவரும் சாகும்வரை சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மூத்த வழக்குரைஞரான சட்ட நிபுணர் திரு. மோகன் மற்றும் அவரது குழுவினர்!
அனுபவம் மிக்க கிரிமினல் மூத்த வழக்குரை ஞராகவும், சமூகநீதியிலும், ஜாதி ஒழிப்பிலும் ஆழ்ந்த கொள்கை உறுதி கொண்ட பவானியைச் சார்ந்த வழக்குரைஞரான சட்ட நிபுணர் திரு. மோகன் அவர் களும், அவரது குழுவினரும் சிறப்பாக வழக்கை நடத்தி, ஆயுள்தண்டனை குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தற்கு முக்கிய காரணமாக அமைந்து, நீதி கிட்டும்படிச் செய்தனர்!
பாதிக்கப்பட்ட தாய் மட்டுமல்ல; ஜாதிவெறிக்கெதிரான சமத்துவத்திற்குப் போராடும் அத்துணை இயக்கங்களும், நீதி கிட்டியமைக்காக நீதிபதியையும், சட்ட நிபுணர்
திரு. மோகன் அவர்களையும், வழக்குரைஞர்களையும் பாராட்டி நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்!
தனி நபர்கள் குற்றவாளிகள் என்று கண்டறிந்து தக்க தண்டனை தந்துள்ளது ஓரளவுக்குத் திருப்தி என்றாலும், இதன் அடி நீரோட்டமான 'ஜாதி', ஜாதி வெறியை ஒழித்தாலொழிய இனி வருங்காலத்தில் இத்தகைய ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாது!
புதிய சட்டங்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும்!
ஜாதிப் பெருமைகளைப் பேசி, அப்பாவி இளைஞர்களுக்கு ஜாதி போதை, வெறியை விசிறி, விசிறி பரப்பிடும் ஆபத்து பேராபத்து; அதனை முளையிலேயே கிள்ளி எறிய தமிழ்நாடு அரசு ஆணவக் கொலையில் மட்டுமல்ல; சுடுகாட்டுக்குப் போகும் பிணங்களைக்கூட ஜாதி வெறியால் தடுக்கும் ஜாதி வெறியர்களை - அதற்குத் தூண்டும் சமத்துவ விரோதிகள்மீது சட்டம் பாயும் வகையில், புதிய சட்டங்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி பயன்படுவது, அம்மைக் கிருமி உள்ளே செலுத்துவதுபோல, (அதைக் காட்டி திசை திருப்பவேண்டாம்).
மருந்தில் விஷம் (ஆண்டிபயாடிக்) 'துளி' கலப்பதும் நோய்க் கிருமிகளைக் கொல்லவே! ஆனால், அதற்காக விஷத்தையே உட்கொண்டால் அது எப்படி உயிரைக் கொல்லுமோ, அதே நிலைதான் இத்தகைய நிர்வாண கோல ஜாதி வெறி. இதனை அகற்ற ஒரே வழி சட்டம் மட்டுமல்ல - தொடர் பிரச்சாரமே!
ஜாதிவெறி, மதவெறிகளிலிருந்து
நாடு தப்ப முடியும்
1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் - பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுதல், ஜாதிப் பெருமை பேசிடுவதன்மூலம் மற்ற மக்களின் அமைதி, ஒருங் கிணைப்பைச் சமூகத்தில் சீர்குலைக்கச் செய்தல் கடுங்குற்றம் என்பதை சட்டம்மூலம் பிரகடனப்படுத்தி, பிரச்சாரப் பெருவெள்ளம் பாய்ச்சினால்தான் ஜாதிவெறி, மதவெறிகளிலிருந்து நாடு தப்ப முடியும்; மக்களின் நிம்மதி உறுதி பெறக்கூடும்.
தமிழ்நாடு அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தினை இப்படி வலுவுள்ள சட்டமாக அமல்படுத்த அவசரமாக முன்வரவேண்டும். ஜாதி ஒழிப்புக்கான முக்கிய முறை - ஜாதி மறுப்புத் திருமணங்களே!
அகிலத்திற்கும் வழிகாட்டக்கூடியதாக இருக்கும்!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் காலத்தின் அருஞ்சாதனை யாக அகிலத்திற்கும் வழிகாட்டக்கூடியதாக அது இருக்கும்!
எனவே, இதுபற்றி தமிழ்நாடு அரசின் செயல் வேகம் புதிய சட்டமாக வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே மலர்ந்தால், பல ''கோகுல்ராஜ்கள்'' காப்பாற்றப்படுவர் என்பது உறுதி!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.3.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக