உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் (super speciality - DM/Mch) அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தர விட்டுள்ளது. தற்போது வழக்கு மேல்முறையீடு செய்யப் பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசிடம் உரிய விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் D.G.H.S. (Director General of Health Service) அவசர அவசரமாக 8.2.2022 அன்று 100 சதவீதம் உயர் சிறப்பு மருத் துவப் படிப்புகளுக்கும் தானே கலந்தாய்வு நடத் துவதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது.
இந்த ஆணையில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இது உச்ச நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? ஓர் அரசே அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது என்பது பொது சுகாதார அமைப் பிற்கு எதிரான சமூக அநீதியாகும். பொது சுகாதாரத் துறையை வார்த்து எடுத்துள்ள தமிழ் நாடு மற்றும் கேரளாவின் முன் மாதிரியைப் பின்பற்றுவதை விடுத்து தகுதி, திறமை (மெரிட்) என்ற ஒற்றை மாயபிம்பத்தை வைத்துக் கொண்டு அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களில் ஒன்றிய அரசு புறக்கணிப்பது என்பது பொது சுகாதாரத் துறையின் வீழ்ச்சியிலேயே முடியும். எனவே ஒன்றிய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர் களுக்கான இடஒதுக்கீட்டையும், அந்தந்த மாநிலத்திற்கான ஒதுக்கீடும் (Domiciliary reservation) நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும்.
சலோனிகுமாரி என்ற ஒரு பெண்மணி தொடர்ந்த வழக் கைத் தவறாகப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை பல்லாண்டுகள் தள்ளித் தள்ளி வாய்தா வாங்கிய பா.ஜ.க. ஒன்றிய அரசு, உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச் சினையில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசை விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவ சரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக் கான கலந்தாய்வை (8.2.2022) மேற்கொண்டது எப்படி? இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு அல்லவா! சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இதில் அவசரமாகக் கவனம் செலுத்தி ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறோம்.
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
11.2.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக