தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

சனி, 12 பிப்ரவரி, 2022

கருநாடகாவில் முஸ்லிம் மாணவிகளின் உடையும் - காவிகளின் மதக்கலவரத் தூண்டலும்!



   February 09, 2022 • Viduthalai

மாணவர்களைப் பிரித்து அவர்கள் கல்விக்கு உலை வைக்கலாமா?

மதக் கலவரத்தைத் தூண்டும் போக்கிற்கு முடிவுகட்ட மதச்சார்பற்ற சக்திகள் கை இணைப்போம்!

கருநாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் வழமையாக அணிந்துவரும் ஹிஜாப் உடையை மதப் பிரச்சினையாக்கி, மதக் கலவரத்தைத் தூண்டும் ஹிந்து மதவெறி சக்திகளின் போக்கைத் தடுத்து நிறுத்தி, இந்தியாவின் மதச் சார்பின்மையைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்! சட்டமும், நீதிமன்றமும் தன் கைகளை உயர்த் தட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்றும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவ அமைப்புகள் திட்ட மிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதால், கருநாடகாவில் சர்ச்சை உருவாகியிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு மங் களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்துத்துவ மாணவ , மாணவிகள் சிலர் காவித் துண்டு அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்தால் காவித் துண்டு அணிவோம் என்றும்,  ஹிந்துத்துவ அமைப்பு  மாணவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் இதே சம்பவம் நடந்தேறியது.

கருநாடகாவில் காவிகளின் கலாட்டா!

இதனையடுத்து கருநாடகாவில் பெரும்பாலான 11-12 ஆம் வகுப்புகளில் படிக்கும் பி.யூ. கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து வரிசையாக தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமிய மாணவிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவ தில்லை என்றும், ஆப்சென்ட் போடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், கருநாட காவில் இருக்கும் பி.யூ. கல்லூரிகளில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தும் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு நடப்பது பா.ஜ.க. ஆட்சியல்லவா?

இந்நிலையில் குண்டபூர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப் பினர் ஹலடி சிறீனிவாஸ், “உங்கள் பெண் குழந்தைகளை ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு அனுப்புங்கள்” என்று இஸ்லாமிய பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்!  இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டபுராவில் கல்லூரிக்குள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளின் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முஸ்லிம் மாணவிகளின் கெஞ்சல்!

அந்தக் காணொலியில், கல்லூரி தலைமை ஆசிரிய ருடன் மாணவிகள் உருக்கமாகப் பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.  “எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது. ப்ளீஸ் கல்லூரிக்குள் விடுங்கள். இத்தனை நாள்களாக அணிந்துவந்தபோது பிரச்சினை இல்லையே. தேர்வுக்கு ரெண்டு மாசம்தான் இருக்கு” என்று இஸ் லாமிய மாணவிகள் கெஞ்சிக் கண்ணீர் விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதை காதில் வாங்காமல், தலைமையாசிரியர் கதவை இழுத்து மூடும் கொடுமை யான காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமாகி வருகிறது.

இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இதனால் கருநாடகாவில் இருக்கும் பெரும்பாலான கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியப் பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்புப் பதிவேட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. “ஹிஜாப்பை'' அகற்றினால்தான் இவர்களை அனுமதிப்போம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது கொடுமையல்லவா? இது தொடர்பாக மாணவிகள் அளித்த பேட்டியில், “நாங்கள் எங்கள் உரிமைகளைத் தான் கடைப்பிடிக்கிறோம். எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறுகிறார்கள். நாங்கள் கல்லூரிக்குள் வந்தும் எங்களுக்கு ஆப்சென்ட் போடுகிறார்கள். அதோடு நாங்கள் வேண்டுமென்றே விடுப்புப் போட்டதாக பொய்யாக எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். அப்படி எழுதிக் கொடுக்க முடியாது என்றால் உங்களுக்குத்தான் பிரச்சினை என்றும் மிரட்டுகிறார்கள்'' என்று மாணவியர் குறிப்பிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த நிலையில், உடுப்பி கல்லூரி மாணவி ஒருவர், ஹிஜாப் அணிந்து வர அனுமதி கொடுக்கவேண்டு மென்று கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்த மனுவில், “இந்திய அரச மைப்புப் பிரிவு 14 மற்றும் பிரிவு 25-இன்படி ஹிஜாப் அணிவது ஒருவரின் அடிப்படை உரிமை. இந்திய அரசமைப்பு எந்தவொரு மனிதரும் தன் மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் உரிமையை உறுதி செய்கிறது. மதம் சம்பந்தமான நடவடிக்கைகள் பொது ஒழுங்கு - சட்டம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை உள்ளடக்கியிருந்தால் மட்டுமே அது மாநில உரிமைகளில் தலையிடக் கூடியது'' என்று மாணவி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணி என்ன? ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க., சங் பரிவார்களின் அணுகுமுறையைத் தெரிந்தவர் களுக்கு ஓர் உண்மை உறுதியாகவே தெரியும்.

எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பது என்ற ஒன்றே ஒன்றுதான் அது.

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸின் புத்தி

எந்த ஒரு நாணயமான அறிவு சார்ந்த கொள்கையுமற்ற நிலையில், மதப் பிரச்சினையை மட்டுமே கண்களை இரவல் வாங்கிக் கூடப் பார்க்கும் புத்திதான் - அணுகுமுறைதான் அவர்களுடையது.

ஒரு சிறு துரும்புக் கிடைத்தால்கூட “ஈறைப் பேனாக்கி, பேனைப் பெரும் ஆளாக ஆக்கி'' என்ற பழமொழிக்கிணங்க  ஒரு யுத்தமே நடத்திவிடுவார்கள்.

அடுத்தவர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் (ப்ரிட்ஜ்) என்ன கறி இருக்கிறது என்று மோப்பம் பிடித்து, அது பசு மாட்டுக் கறி என்று சொல்லி ஒருவரை அடித்துக் கொல்லவில்லையா?

ஆடு- ஓநாய்க் கதை

ஆடு - ஓநாய்க் கதைதான். ஓடையில் மேற்பகுதியில் நின்று கொண்டிருந்த ஓநாய், 'கீழ்ப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆடு தண்ணீர் குடித்ததால் தான், குடிக்கும் தண்ணீர் குழம்பி விட்டது' என்று ஆட்டை ஓநாய் அடித்துக் கொன்ற கதையை ஏட்டில்தான் படித்திருக்கிறோம். அந்தத் தன்மையைத்தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் மூலம் இப்பொழுது பார்க்கிறோம்.

கருநாடகாவில் மட்டும்தானா?

கருநாடகாவில் பள்ளி செல்லும் முசுலிம் பெண்கள், பள்ளி சீருடையைப் புறக்கணிக்கவில்லை. சீருடையும் அணிந்து, அதற்குமேல் அவர்களின் மத வழக்கப்படி 'ஹிஜாப்' அணிந்து வருகின்றனர். ஏதோ கருநாடகாவில் மட்டும் முஸ்லிம் மாணவிகள் இப்படி அணிந்து வர வில்லை. இந்தியா முழுமையும் - இன்னும் சொல்லப் போனால் உலகம் முழுவதுமே அணிந்து வருகிறார்கள்.

உலகம் முழுவதுமே இதனை மாற்றப் போகிறார்களா? கருநாடகாவில் இந்த விஷயத்தைச் செய்யப் போய், உலகில் பெரும் எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம் நாடுகளின் கடும் எதிர்ப்பை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டும் வேலைக்கு வித்திடுவதை ஒன்றிய அரசு இந்த நிலையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

பொறுப்புணர்ச்சியுடன் தெரிவிக்கிறோம்

தங்கள் அமைப்பை வளர்ப்பதற்கான யுக்தி என்று இதை நினைத்தால், பன்னாட்டளவில்கூட பெரிய விலையைக் கொடுக்க நேரும் என்று மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லிம் மாணவிகள் எப்பொழுதும் அணிந்து வருவது போன்றே உடை அணிந்து வருகிறார்கள்? இப்பொழுது திடீர் என்று இந்தப் பிரச்சினையை எழுப்புவானேன்? இதன் பின்னணி என்ன? கருநாடகாவில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்ற பலமா? பணமா? திட்டமா?

ஏட்டிக்குப் போட்டி

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று சொல்லுவது பச்சையான ஆர்.எஸ்.எஸின் கலவர அணுகுமுறைதானே! இதன்மூலம் ஹிந்து - முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி அதன்மூலம் குளிர்காயலாம் என்ற கலவரப் புத்திதானே! பல இடங்களில் செய்து பார்த்து வெற்றி கண்ட ருசி - இப்பொழுது கருநாடகாவிலும் அரங்கேற்றப்படுகிறது.

காவி அணிந்துகொண்டு ஒரு பக்கம் மாணவர்கள் நிற்பது - அதனை மறுத்து இன்னொரு பக்கத்தில் அணிதிரண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? இந்தியாவில் மத ரீதியாக - இரு அணிகளாக (Polarisation) பிரிக்கும் நோக்கத்தின் புள்ளி, எச்சரிக்கை!

மதச்சார்பின்மைமீது அக்கறையா?

பள்ளிகளில் மதச் சின்னங்களை அணிந்து வரக்கூடாது என்று பேச முற்பட்டுள்ளார்கள். இவர்கள் எப்பொழுது மதச்சார்பின்மைக் கொள்கைமீது காதல் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

முஸ்லிம்களையும், கிறித்தவர்களையும் பார்க்கும் போதுதானா?

திருநீறு அணிவது மத அடையாளம் இல்லையா?

அப்படிப் பார்த்தால் மாணவர்கள், மாணவிகள் திருநீறு அணிந்து வரலாமா? நாமம் போட்டு வரலாமா? பூணூல் அணிந்து வரலாமா? உச்சிக்குடுமி வைத்து வரலாமா? என்ற கேள்வி எழாதா? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பஞ்சாபில் சொல்லுவார்களா?

பஞ்சாபில் சீக்கிய மாணவர்கள் அணியும் தலைப்பாகையை எடுக்கச் சொல்லுவார்களா?

அதைச் செய்து பார்க்கச் சொல்லுங்கள்; என்ன நடக்கும் என்பது காவிகளுக்கு நன்றாகவே புரியும்.

பள்ளிகளில் ஹிந்துப் பண்டிகைகளைக் கொண்டாடலாமா?

கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த ஆயுத பூஜை, விசய தசமியில் மாணவர் சேர்க்கை, அந்த நாளில் நெல் பரப்பி அதில் எழுத்துப் பயிற்சித் தொடக்கம், ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள், சூரிய நமஸ்காரம், காலையில் மதம் சார்ந்த வழிபாடுகள், பிரார்த்தனைகள், ஜெபங்கள் ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள மதம் சார்ந்த வழிபாட்டு இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? இஸ்லாமிய, கிறித்துவச் செயற்பாடுகளைத் தடுக்க எடுக்கப்படும் முனைப்புகள் ஹிந்து மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கும் பொருந்த வேண்டுமே!

வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். விஷ வித்தை ஊன்றி அதன் அறுவடையைச் சுவைக்கத் திட்டமிடுகிறது காவிக் கூட்டமான சங் பரிவார்!

மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள அனைவரும் கட்சிப் பாகுபாடுகளின்றி ஒன்றுபட்டு இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக முன்வரவேண்டும்.

பகுத்தறிவுக் கண்ணோட்டம்

பகுத்தறிவு பேசுபவர்கள் முஸ்லிம் பெண்களின் மத அடையாளத்துக்கு வக்காலத்து வாங்கலாமா என்று சில அரைகுறைகள்  உளறக் கூடும்.

நாங்கள் பகுத்தறிவாளர்கள்தான். ஆண் - பெண் இருவருக்கிடையே ஆடையில்கூட வேறுபாடு கூடாது - ஜடைகள் கூடாது - பெயர்களில் கூட ஆண் - பெண் வேறுபாடு தேவையில்லை என்று சொல்லுபவர்தான் தந்தை பெரியார்.

எதையும் வேறு உள்நோக்கத்தோடு செய்தால் அதனை ஏற்க முடியுமா? இந்த மாற்றத்திற்குக் காரணம் பகுத்தறிவோ, சமத்துவ சிந்தனையோ, சீர்மையோ அல்ல; மதவெறியின் முனைப்பு. எனவேதான், வன்மை யாகக் கண்டிக்கிறோம்.

அந்த நிலையைப் பகுத்தறிவுச் சிந்தனையையூட்டி செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது தான் எங்கள் நிலை - ஒரு ஜனநாயக நாட்டில் சிந்தனைச் செழுமைமூலம்தான் இதனை உருவாக்கவேண்டும்.

இன்றைக்குப் பெண்கள் பேண்ட் அணிகிறார்களே!

இன்றைக்குப் பெண்கள் பேண்ட் - சர்ட் அணிந்து வரவில்லையா? கிராப் தலையுடன் வருவது பெருக வில்லையா? முஸ்லிம் பெண்களிடம் கூட இந்த நிலை - மாற்றம் வரத்தான் செய்கிறது. இவை எல்லாம் பகுத்தறிவு- முற்போக்குக் கொள்கைக்கு வெற்றிதான். மாற்றம் என்பதுதான் மாறாதது - இது அறிவியல்.

ஹிந்துத்துவாவாதிகள் பேண்ட் அணியலாமா?

கிறிஸ்துவக் கலாச்சாரத்தைப் புறந்தள்ளி, ஹிந்துக் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் பிரதமர் உள்பட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் உள்பட எந்த உடைகளை அணிகிறார்கள்? வெள்ளைக்காரனின் கிறித்துவக் கலாச் சாரத்தைத் தானே பயன்படுத்துகின்றனர் - பின்பற்று கின்றனர்.

ஊருக்குத்தான் உபதேசமா? ஆர்.எஸ்.எஸில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கட்டும். நாட்டு மக்களும் சிந்திக்கட்டும்!

சட்டமும், நீதித்துறையும் நேர் படுத்தட்டும்!

நாசகால மதவெறிப் போக்கைத் தடுத்து நிறுத்துவோம்! மதச்சார்பற்ற சக்திகள் கை இணைப்போம்! அரசமைப்புச் சட்டத்தின்மீதே உறுதி மொழி எடுப்பவர்கள் அதன் முகப்புரையில் முக்கியமாக இடம்பெற்றுள்ள மதச்சார்பின்மையை (செக்குலர்) மறக்கக் கூடாது - மறந்து செயல்பட்டால் சட்டமும், நீதிமன்றமும் தங்கள் கைகளை உயர்த்தி நேர்படுத்தட்டும் - இது காலத்தின் இன்றியமையாத கடமையாகும்!

“மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்!''

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை       

9.2.2022              

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:35 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் அறிக்கை, கர்நாடகா, மாணவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ▼  பிப்ரவரி (10)
      • மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியு...
      • ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை ‘பணியிடை நீக்கம்...
      • மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் நிதியில்லாமல் முடங்க...
      • ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல...
      • ஹிப்போ கிரேட்டிக் பெயரால் எடுக்கப்படும் உறுதிமொழிய...
      • ‘நீட்'டால் பலன் யாருக்கு? பாதிப்பு யாருக்கு?
      • மனிதனை மனிதன் சுமப்பதா? மடாதிபதியை எதிர்த்து மாபெர...
      • திருவாவடுதுறைப் பட்டினப் பிரவேசம்: திருவாவடுதுறையி...
      • கருநாடகாவில் முஸ்லிம் மாணவிகளின் உடையும் - காவிகளி...
      • தமிழ்நாடு முதலமைச்சர் அவசர கவனத்துக்கு! அப்பட்டமான...
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (11)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ▼  பிப்ரவரி (10)
      • மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியு...
      • ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை ‘பணியிடை நீக்கம்...
      • மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் நிதியில்லாமல் முடங்க...
      • ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல...
      • ஹிப்போ கிரேட்டிக் பெயரால் எடுக்கப்படும் உறுதிமொழிய...
      • ‘நீட்'டால் பலன் யாருக்கு? பாதிப்பு யாருக்கு?
      • மனிதனை மனிதன் சுமப்பதா? மடாதிபதியை எதிர்த்து மாபெர...
      • திருவாவடுதுறைப் பட்டினப் பிரவேசம்: திருவாவடுதுறையி...
      • கருநாடகாவில் முஸ்லிம் மாணவிகளின் உடையும் - காவிகளி...
      • தமிழ்நாடு முதலமைச்சர் அவசர கவனத்துக்கு! அப்பட்டமான...
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.