புதுடில்லி. டிச. 14 பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்கு வதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்ட விவகாரம் குறித்து விளக் கம் கேட்டு அறிக்கை அனுப்பி யது டில்லி மகளிர் ஆணையம்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாண வர்களுக்கான முதல் பருவத் தேர்வில் கடந்த 11-ஆம் தேதி நடை பெற்ற ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றது.
மேலும், மற்றொரு கேள் வியில், கணவனின் பேச்சை கேட்டால் தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகா ரத்தை பெண் விடுதலை அழித்து விடுகிறது என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தது.
பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந் துள்ள இந்த பத்தி வினா கேள்வி களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் இன்று நாடாளு மன்றத்திலும் எதிரொலித்தது.
இதுகுறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வி இடம் பெற்றதற்கு “மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத் தினார். மேலும் இந்த கேள்வி களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், சர்ச்சைக் குரிய இந்த கேள்விகளை கேள்வித்தாளில் இருந்து நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, அந்த கேள்விக்கு அனைத்து மாணவர் களுக்கும் முழு மதிப்பின் வழங் கப்படும் என்று தெரிவித் துள்ளது. இந்த நிலையில் இந்த பிற் போக்குத்தனமான கேள்வி இடம் பெற்றது தொடர்பாக டில்லி மகளீர் ஆணையம் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக