தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

வியாழன், 16 பிப்ரவரி, 2023

தமிழர் தலைவர் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் பரப்புரை!



  February 16, 2023 • Viduthalai

 மதவெறிக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான்!

மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேதுக்கால்வாய், மீண்டும் தொடங்கப்பட வேண்டும்!



திருவள்ளூர், பிப்.16, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் 15-02-2023 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்ற பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு  மாவட்ட துணை செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.  பொதுக்குழு உறுப்பினர் மணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,மேனாள் மாவட்ட தலைவர் மோகனவேல், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் டில்லி பாபு, மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன், அமைப்பு செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் பொதட்டூர்பேட்டை புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்கவுரை ஆற்றிட நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை!

ஆசிரியர் தனது உரையின் தொடக்கத்தில், தனக்கு முன்னதாக பேசிய தி.மு.க. மேனாள் நகர்மன்றத் தலைவர் பாண்டியன், திருவள்ளூர் மாவட்டத்தின் நகர் மன்ற தலைவராக இருந்ததையும், தற்போது அந்த வாய்ப்பு அவரது இணையருக்கு கிடைத்திருக்கிறது. இது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி! இது திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று பேசியிருந்ததை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, ”இது செங்கல்பட்டு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டத்தில்தான் 1929 இல், முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. அதில்தான், ’எல்லா துறைகளிலும் பெண்கள் தலைமை தாங்க வேண்டும்’ என்று தந்தை பெரியார் தீர்மானம் போட்டார். இதோ, இங்கே ஒரு நகர் மன்றத் தலைவராக ஒரு பெண் வந்திருக்கிறார். அதுதான் திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை!” என்று அழுத்தமாக குறிப்பிட்டதும் கூட்டத்தினர் உணர்வு வயப்பட்டு கைதட்டினர்.

அதென்ன பசு மாடு? எருமை மாடு என்னாச்சு?

தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு முன்னா லேயே தந்தை பெரியார் இங்கே பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டு, தோழர் சந்திரன், விமல்ராஜ், தந்தை பெரியாருக்கு உதவியாளராக இருந்த திருவள்ளூர் சீனிவாசன் ஆகியோரை நினைவு கூர்ந்தார். மேலும் அவர், நேற்று முன்தினம் (பிப் 14) செய்திகளில் ஒன்றை நினைவூட்டிப் பேசினார். அதாவது, காதலர் தினத்தின் தாக்கத்தை குறைப்பதாக எண்ணிக் கொண்டு ”பசு அரவணைப்பு தினம்” என்று கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை ஒன்றிய அரசின் ’மிருகங்கள் பராமரிப்பு வாரியம்’ வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அது அரசமைப்புச் சட்ட விரோதம் என்பதையும் தாண்டி, காதலர்களுக்கிடையே மூன்றாம் நபருக்கு என்ன வேலை? என்று கேட்டுவிட்டு, நமது தமிழ்ப்பண்பாட்டில் காதல் திருமணம் உண்டு. ஆரியம் நுழைந்த பின்னர் குழந்தைத் திருமணம் வந்தது. ”பெரியார்” திரைப்படத்தில் இது ஒரு காட்சியாகவே காட்டியிருப்பார்கள். பெண்கள் இன்று நகர்மன்றத் தலைவராக, சட்டமன்றத் தலைவராக, வழக்குரைஞராக, நீதிபதிகளாக வந்திருக்கிறார்களே! என்று அடுக்கிக் கொண்டே போனார். தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் 14 பெண் நீதிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? இதைத்தானே 'திராவிட மாடல்' என்று சொல்கிறோம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். காதலர் தினத்தில், பசு அரவணைப்பு தினமா? அதென்ன பசு மாடு? எருமை மாடு என்னாச்சு? எல்லா மிருகங்களும் ஒன்று தானே? கேட்டால் பசு மாடு பால் கொடுக்கிறதாம். எருமை மாடு அதைவிட அதிகம் பால் கொடுக்கவில்லையா? என்று சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து காவித் தத்துவத்தை துளைத் தெடுத்தார். இறுதியாக, ”பசுவை கட்டிப்புடிக் கணும்னு போனவன் இப்போது மருத்துவ மனையில் இருக்கிறான்” என்று ஒரு பஞ்ச் வைத்தார். வெடிச்சிரிப்புடன் கைதட்டலும் சேர்ந்து கொண்டது.

பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு!

1899 இல் சென்னையில் பஞ்சமர்களின் நிலை என்ன என்பதை, 124 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையின் நகலை கையில் வைத்து படித்துக் காட்டி, "இன் றைக்கு பஞ்சமர்களுக்கு இடமில்லை சொல்லிப் பாரு, சொல்றவன் சிறையில் இருப்பான்” என்று சீற்றத்துடன் சொன்னதும் அதே சீற்றம் மக்களின் கைதட்டலிலும் எதிரொலித்தது. ஓயவில்லை அவரது சீற்றம். “இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆயாச்சே! என்ன வானம் இடிஞ்சு போச்சா?” என்று ஒரு போடு போட்டார். ஓயாத கைதட்டல்தான்! "கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கிறதே? இதுவரை 10 பிரதமரைப் பார்த்தாயிற்றே? இதோ திராவிட மாடல் ஆட்சியின் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% கொடுத்துட்டாரே! இது அமைதிப் புரட்சி அல்லவா? அறிவுப்புரட்சி அல்லவா?" என்று முடிக்கும் முன்னே கைதட்டல் தொடங்கிவிட்டது. "பா.ஜ.க. கொள்கை பெண்களுக்கு எதிராக அல்லவா இருக்கிறது என்று புதிய கல்விக் கொள்கை பற்றி தொடர்ந்து பேசினார். பா.ஜ.க. என்பது எல்லா கட்சிகளையும் போல தனித்து முடிவெடுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். சின் கொள்கையைத்தான் செயல்படுத் துகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்டது? இந்தியாவில் மூன்று முறை மதவெறிக்காக தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். இதை மறுக்க முடியுமா?" என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து சேது சமுத்திரத்திட்டம் பற்றி விளக்கிப் பேசினார்.  "சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதற் காகத்தான் இந்தப் பயணம். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தி.மு.க. மேனாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், டாக்டர் வளர்மதி, ஆசிரியர் நாவுக்கரசு, தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி, வி.சி.க. மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், வி.சி.க. அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன், சி.பி.எம்.நகர செயலாளர் உதய நிலா,சி.பி.அய்.மாவட்ட செயலாளர் கஜேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநில துணைத் தளபதி சுந்தர், நகர கழக அமைப்பாளர் யுவராஜ், தி.மு.க.9 ஆவது வார்டு செயலாளர் அயூப்அலி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பொருளாளர் பாஸ்கரன், ப.க. பொறுப்பாளர் எழில் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

அரக்கோணத்தில் தமிழர் தலைவர்!

திருவள்ளூர் தோழர்களின் அன்பு மழையிலிருந்து விடுபட்டு, தமிழர் தலைவர் அரக் கோணம் புறப்பட்டார். வழியில் அவருடைய பால்ய நண்பர் சரோஜா ஏகாம்பரம் இல்லம் சென்று சில மணித்துளிகள் இருந்துவிட்டு மறு படியும் புறப்பட்டார். அரக்கோணத்தில் ஆசிரி யருக்கு எழுச்சிகரமான தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்றுக்கொண்டு மேடை யேறினார். அரக்கோணம் அம்பேத்கர் வளைவு முன்பு நடைபெற்ற 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் எல்லப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன், மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட அமைப்பாளர் ஜீவன்தாசு, பொதுக்குழு உறுப்பினர் சூரியகுமார், நகர் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் தீனதயாளன், மாவட்ட துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கழக பிரச்சார அணி செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.   

ஆளுநரின் சட்ட விரோதப் போக்கு

தமிழர் தலைவர் உரையாற்றுகையில், அவருக்கு பக்கத்தில் இருந்த பெண் நகர்மன்றத் தலைவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதிலிருந்து உரையைத் தொடங்கினார். அதாவது, "நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் கங்கையில் மூழ்கடித்து கொலை செய்தனர்; வங்காளத்தில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்றனர்; வெள்ளைக்காரன் வந்துதானே இதையெல்லாம் தடை செய்தான். குழந்தைத் திருமணம் இருந்ததே. தமிழ்நாட் டிலும் உண்டே. இன்றும் சிதம்பரத்தில் தீட்சி தர்கள் மட்டும் நடத்துகின்றரே" என்று குறிப் பிட்டுவிட்டு, இந்த நிலைமை மாறியிருக்கிறதா? இல்லையா? என்றார். தொடர்ந்து, "பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசுக் கல்லூரிக்கு பெண் படிக்கச் சென்றால் மாதம் 1000 ரூபாய் கொடுக் கப்படுகிறதே! வேறு மாநிலத்தில் இது இருக் கிறதா?" என்று கேள்வி கேட்டார். மக்கள் இல்லை என்பதையே கைதட்டல் மூலம் பதி லாகத் தந்தனர். "இந்த ஆட்சியைத்தானே கலைக்கலாம் என்று பார்க்கிறார்கள். யார் மூலமாக? ஆளுநர் மூலமாக" என்று பதிலுடன் பெண் விடுதலையிலிருந்து மாநில உரிமைகள்  பக்கமாக பேச்சைத் திருப்பினார்.  அப்படியே ஆன்லைன் ரம்மி, அதன் மூலம் நாளும் தற் கொலைகள் நடப்பதை வேதனை யுடன் எடுத் துரைத்து, ஆளுநரின் அரசியல் சட்ட விரோதப் போக்கைச் சொல்லி, இதையெல்லாம் மக்க ளுக்கு விளக்கத்தான் இந்தப் பயணம் என்றார்.

சேது கால்வாய் திட்டத்தை முடக்கிய மூன்று பார்ப்பனர்கள்

தொடர்ந்து ஒன்றிய அரசின் யோக்கி யதையை தோலுரித்தார். அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது. 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி கேட்டால், ஜூம்லா என்று சொல்வது, ஒரு பக்கம் சேது சமுத்திரத் திட்டத்தில் வாய்தா வாங்கிக் கொண்டே, இராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று நாடாளுமன்றத் திலேயே சொல்வது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகச் சொல்லி விட்டு, இருக்கிற வேலைகளையும் பறித்தது என்று பட்டியலிட்டார். அதற்கு மாறாக 'திராவிட மாடல்' ஆட்சி பற்றியும் கோடிட்டுக் காட்டினார். ஒரு மனிதனுக்கு கல்வியும் சுகாதாரமும்தான் முக்கியம் என்று கூறிவிட்டு, தமிழ்நாடு அரசின் வீடு தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார். சேது கால்வாய் திட்டம் பற்றி பேச வந்தவர், “இருக்கின்ற பாபர் மசூதியை இல்லை என்று சொல்லி இடித்தனர். இல்லாத ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்கின்றனர்” என்ற மதவாதிகளின் புரட்டை புதுக்கவிதை ஒன்றை நினைவுபடுத்தி, அவர்கள் எவ்வளவு ஆபத் தானவர்கள் என்பதை புரிய வைத்தார். சேது சமுத்திரத்திட்டம் முடக்கப்பட்ட தற்கு மூன்று பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். தொடர்ந்து, மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சோ ராமசாமி, சுப்பிரமணிசாமி ஆகியோர் அந்த பார்ப்பனர்கள் என்பதையும் அம்பலப்படுத் தினார்.  ஏன் அப்படிச் செய்தனர்? என்றொரு கேள்வி கேட்டு, இந்தத் திட்டம் நிறைவேறிவிட்டால், கலைஞருக்கு புகழ் வந்துவிடும். தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து விடுவர் என்ற அற்ப அரசியல்தான் என்று பதிலளித்தார். அதற்காக உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர் என்று கூறிவிட்டு, "உங்களுக்கு தெரியும் உச்ச நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை. ஆகவே மீண்டும் சேது சமுத்திரத்திட்டம் வரவேண்டும். அது வெகு மக்களின் கருத்தாக மலர வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பயணம். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அடுத்த நாள் பயணத்திட்டத்துடன் நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பினார் தமிழர் தலைவர்!

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகர தி.மு.க.துணை செயலாளர் அன்பு லாரன்ஸ், வி.சி.க.ஒன்றிய செயலாளர் சந்தர், வி.சி.க. நகர செயலாளர் அப்பல்ராஜ், ம.தி.மு.க. பொறுப் பாளர்கள் ஆறுமுகம், ஞானப்பிரகாசம், ம.த. கட்சி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், சி.பி.அய்.எம். பொறுப்பாளர்கள் சீனிவாசன், துரைராஜ், வெங்கடேசன்,எஸ்.சி.எஸ்.டி.யூனியன் நிர்வாகிகள் எஸ்.வந்தராவ்,கலைநேசன், தலித் மக்கள் முன்னணி நிர்வாகி மோகன், ம.ம.க. நிர்வாகி முகம்மது அலி, வி.சி.க. நிர் வாகிகள் பெருமாள், பாக்கியராஜ், நரேஷ், கதிர்வேல், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முடிவில் நகர கழக  செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார். கழகத் தலைவர் மேற் கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திரா விட மாணவர் கழக மாநில செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை கேட்டு தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து பதிவு
  February 16, 2023 • Viduthalai


கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு 

செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை 

கேட்டு தங்கள் கைப்பேசிகளில்  படம் எடுத்து பதிவு செய்தனர் 

- இதுதான் பெரியார் மண்! (அரக்கோணம்)

சமூக நீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (திருவள்ளூர், அரக்கோணம் - 15.2.2023)
   February 16, 2023 • Viduthalai

பரப்புரை தொடர் பயணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தீப்பந்தம் சுழற்றியும் பயனாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு


இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:23 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அரக்கோணம், திருவள்ளூர், பரப்புரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ▼  பிப்ரவரி (9)
      • பலே! இப்படியும் ஒரு நாடு நியூயார்க்கில் இறந்து போன...
      • 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து! ஒன்றிய அரச...
      • ஓசூரில் தமிழர் தலைவர்!
      • கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • செய்யாறு பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு எட...
      • சிங்கப்பெருமாள் கோயில், பல்லாவரம் பகுதிகளில் தமிழர...
      • மக்களை படிக்காதேன்னு சொல்றதுக்கு ஒரு கட்சியா? ஒரு ...
      • தமிழர் தலைவர் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் பர...
      • பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த...
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ▼  பிப்ரவரி (9)
      • பலே! இப்படியும் ஒரு நாடு நியூயார்க்கில் இறந்து போன...
      • 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து! ஒன்றிய அரச...
      • ஓசூரில் தமிழர் தலைவர்!
      • கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
      • செய்யாறு பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு எட...
      • சிங்கப்பெருமாள் கோயில், பல்லாவரம் பகுதிகளில் தமிழர...
      • மக்களை படிக்காதேன்னு சொல்றதுக்கு ஒரு கட்சியா? ஒரு ...
      • தமிழர் தலைவர் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் பர...
      • பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த...
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.