வியாழன், 1 செப்டம்பர், 2022

இதுதான் இவர்களின் பசுநேசம் கருவுற்ற பசுவை பாலியல் இச்சைக்கு ஆளாக்கி கொலை செய்த அசாம் மாநிலத்தவர்


கவுஹாத்தி, செப். 1- அசாம் மாநிலத்தில் உள்ள சந்தன் பிடி பகுதியில் வசிக்கும் ஆர்த்தி புபியா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைத் தந்தார். 

அதில் எனது மாட் டுக் கொட்டகையில் கட் டிவைத்திருந்த கருவுற்றி ருந்த பசுமாடு அதிக உதி ரப்போக்கால் மரண மடைந்துள்ளது, நன்றாக இருந்த மாடு இறந்தது பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தார்.   காவல்துறையினரின் விசாரணையில் பசுமாட்டின் பின்பகுதி யில் கடுமையான காயம் ஏற்பட்டு அதன் மூலம் மரணம் உண்டானது என்று தெரியவந்தது, 

இதனை த்தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த 30 வயதான பரத்யுத் புபியா என்பவன் கருவுற் றிருந்த மாட்டோடு கொடூரமான முறையில் உடலுறவில் ஈடுபட்டுள் ளான். இதில் வால்பகுதியி லிருந்து உடலின் உள்ளே குடல் பகுதிவரை கிழிந்தி ருந்தது. மேலும் அவனது வீட்டின் பின்னால் மாட் டின் ரத்தக்கறையுடன் கூடிய ஆடைகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து பரத்யுத் மீது இந்திய சட்டப்பிரிவு 377-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் பரத்யுத் பக்தியுள்ளவர் என்றும் பசுக்களுக்கு பூஜை செய்ய ஊர்க்கா ரர்கள் அவரை அழைப் பார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மாடுகளுக்கு பூஜை செய்ய அழைக்கும் போது அழகான மாடு களைப் பார்த்தால் இரவு நேரம் தொழுவத்திற்கு சென்று மாடுகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பானாம். ஆனால் கருவுற்ற மாடு முரண்டு பிடித்ததால் வன்முறை யாக நடந்துள்ளான். இதனால் மாடும் மரணம டைந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக