தமிழ்நாடு ஆளுநருக்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம்
சென்னை, ஜூலை 12- உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப் பும் செயலில் இறங்க வேண் டாம் என ஆளுநருக்குக் கண் டனம் தெரிவித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்கு ரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப் படி ஆளுநர் நடந்து கொள் கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துகள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன
தமிழ்நாட்டிற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் இதுவரை இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளி யில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன் றைய ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள் ளன.
சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைச் சொன்னார். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை தி.மு.கழகத்தின் சார்பில் நான் அளித்தேன். இந்த நிலையில், ‘திராவிடர்’ குறித்து ஆளுநர் அவர்கள் அடுத்த விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
‘திராவிடர்’ என்று அடை யாளப்படுத்திப் பிரித்ததே ஆங்கிலேயர்கள்தான் என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600 ஆம் ஆண்டு என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னதாக ‘திராவிடம்’ என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா? இல்லை என்று ஆளுநர் அவர்கள் சொல்கி றாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்?
ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானவை என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர் கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங் களை மேலோட்டமாக ஆளு நர் அவர்கள் வாசித்தாலே ஆரி யர் - திராவிடர் என்ற உண் மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
அசல் மனு தரும சாஸ்தி ரத்தின் பத்தாவது அத்தியாயத் தின் 33ஆவது சூத்திரம் என்ன சொல்கிறது என்றால், ”பவுண்ட்ரகாஷ் சவுட்ர த்ரவிடா காம்போஜாயவநா ஷகா பாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதா கஷா” - என்கிறது. "இத்தேசத்தை ஆட்சி செய்த வர்கள் அனைவரும் சூத்திர னாய் ஆகிவிட்டார்கள்"- என்கி றது மனுசாஸ்திரம்.
மகாபாரதத்தில் ‘திராவி டம்’ வருகிறது. காஞ்சி புராணத் தில் ‘திராவிடம்’ இருக்கிறது. தாயுமானவர் ‘திராவிடம்’ சொல்கிறார். தஸ்யூக்கள், அடிமைகள், திராவிடர்கள் "சூத்திரர்கள்" ஆக்கப்பட்டார் கள் என்கிறார் டாக்டர் அம் பேத்கர் அவர்கள்.
இத்தகைய இந்தியச் சமூக வரலாற்றின் சாதாரணச் செய் திகளைக் கூட அறிந்து கொள் ளாமல் ஆங்கிலேயர்கள் வந்து தான் ‘திராவிடர்கள்’ என்று பிரித்தார்கள் என்று சொல்வது வரலாறு அறியாதவர் கூற்று. அல்லது வரலாற்றை மறைப்ப வர்களின் கூற்று ஆகும்.
‘திராவிடம்’ என்பது இடப் பெயராக, இனப்பெயராக, மொழிப் பெயராக இருந்தது. வடக்கு - தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்தது. ஆரியன் - திராவிடன் என்ற இனப்பாகுபாடாக இருந்தது. தமிழ் - சமஸ்கிருதம் என்ற மொழிப்பாகுபாடாக இருந் தது. இப்படி காலம்காலமாக இருந்த இன - இட - மொழிப் பாகுபாட்டை முன்வைத்து தமிழர் தம் அரசியலை - முன் னேற்றத்தை - எழுச்சியை உரு வாக்க முனைந்ததுதான் திரா விட இயக்கம் ஆகும். கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருக்கி றது.
ஆயிரமாண்டுப் பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வரு கிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத வர்கள் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக் கிறார்கள். இத்தகைய பீதிதான் ஆளுநர் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.
மன்னர்கள், குறுநில மன் னர் கள், சமஸ்தானங்கள் - என பிரிந்து கிடந்த நிலப்பரப்பை ஒன்றாக்கி ‘இந்தியா’வாக ஆண்டது பிரிட்டிஷ் அரசு. இங்கிருந்த ஜாதி - மத - இன - மொழி - எல்லை வேற்றுமை களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று வேண் டுமானால் சொல்லலாமே தவிர, இந்த வேற்றுமைகள் அனைத்தும் அவர்களால் உரு வாக்கப்பட்டவை என்று சொல் வது வரலாற்றை மறைப்பது ஆகும். வேத கால வரலாற்று இலக்கியங்களை ஆளுநர் அவர்கள் வாசித்தாலே இத்த கைய வேற்றுமைகளின் பிதா மகர்கள் யார் என்பதை அவர் உணரலாம்.
பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இன்று இந்தியா இல்லை. பா.ஜ.க. ஆட்சியில்தான் இன்று இந்தியா இருக்கிறது. அதே வேற்றுமைகளை நீக்கும் செயல் கள் என்னென்ன என்று பார்த்து அதனை முன்னெடுப்ப தற்கு தன்னால் முடிந்த காரி யங்களை ஆளுநர் அவர்கள் செயல்படுத்தலாம். மற்றபடி கடந்த கால வரலாற்றுக்கு கற் பனை முலாம் பூசி, உண்மை யான பிரச்சினைகளைத் திசை திருப்ப முன்வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கவர்னர், கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம்கூட பிரிட்டிஷாரால் உருவாக்கப் பட்டவை தான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழ் நாடு ஆளுநர் தன் பதவியேற் பின்போது, அரசமைப்புச் சட் டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத் தகைய கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கி றேன், என்று அவர் அறிக்கை யில் குறிப்பிடுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக