அமெரிக்காவில் சென்று அவர் உரையாற்றியதுகூட ஹிந்து மதத்தைப் பற்றியல்ல - பிராமண மதத்தைப்பற்றிதான் பேசினார்.
இன்றைக்கு இட ஒதுக்கீட் டுக்கு எதிராகவும், கல்வி குறித் தும் ‘சங்கிகள்' பேசுகிறார்களே, அதுபற்றியும் அவர் கூறுவது என்ன?
இதோ:
- ‘‘ஏ, பிராமணர்களே, பிரா மணர்களுக்குக் கீழ் ஜாதியின ரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறதென்றால், பிரா மணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர் கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காக செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்குக் கொடுங் கள். ஏனெனில், அவர்களுக்குத் தான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என் றால், எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவியிலேயே அறி வாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும், ஆசிரியர் களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும், பகுத்தறிவுமாகும். (நூல்: கொழும்பு முதல் அல்மோரா வரை பக்கம் 139, 140).
- 1901 மார்ச் 31 ஆம் நாள் டாக்காவில் பகோஜ் பள்ளியின் திறந்த வெளி மைதானத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை யிலிருந்து....
பிராமணர்களுக்கு ஒரு வார்த்தை: உங்கள் குலப்பெரு மையும், பாரம்பரியப் பெருமித மும் வீணே, அதை விட்டொழி யுங்கள். உங்கள் சாஸ்திரத்தின்படி பார்த்தால் இப்போது உங்களிடம் பிராமணத்துவம் இல்லை. ஏனெ னில் நீண்ட காலமாக நீங்கள் மிலேச்ச அரசின்கீழ் வாழ்ந்து விட்டீர்கள், உங்கள் முன்னோ ரின் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கையிருக்குமானால், இந்தக் கணமே தூஷாக்கினியில் (உமியைக் குவித்து வைத்து மூட் டுகின்ற தீ) பிரவேசித்து உங்கள் பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள்.
குமாரில பட்டர் பவுத்தர் களை ஒழிக்க விரும்பி முதலில் பவுத்தர் ஆனார். பின்னர் பலரை வாதத்தில் வென்றார். பலரது மரணத்திற்குக் காரணமானார். தமது பாவங் களைக் கழுவுவதற் காக தூஷாக் கினியில் வீழ்ந்து உடலை மாய்த்துக் கொண்டார். அவரைப் போன்ற நெஞ்சத் துணிவு உங்களுக்கு இல்லா விடில் உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள். எல்லோ ருக்கும் உத விக்கரம் நீட்டுங்கள். அறிவின் கதவை திறவுங்கள். தளர்த்தப் பட்ட பாமர மக்களின் நியாயமான உரிமைகளையும், சலுகை களையும் மீண்டும் ஒரு முறை வழங்குங்கள்.''
இந்த விவேகானந்தரை அறிவீர்களா?
- மயிலாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக