ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 42% 21 வயதுமுதல் 40 வயதுள்ளோர்

இளைஞர்களே எச்சரிக்கையாக இருப்பீர்!

கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 42 சதவிகிதம் 21 வயது முதல் 40 வயதுள்ளோர் - இளைஞர்களே எச்சரிக் கையாக இருப்பீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மத்திய நல்வாழ்வுத் துறையின்

புள்ளி விவரம்

மத்திய நல்வாழ்வுத் துறையின் கூட்டுச் செயலாளர் அகர்வால் பத்திரிகைகளிடம் கரோனா வைரஸ் (கோவிட் 19) இந்தியாவில் எப்படி, யாரை பாதிக்கிறது எந்த வயது அளவில் உள்ளவர்கள் என்பதுபற்றிய புள்ளி விவரங்களைத் தந்துள்ளார் - முதல் முறையாக!

இது மிகவும் அதிர்ச்சிக்குரியதாகவும், அதேநேரத்தில் வேதனைக்கும், விசனத் திற்கும் உரியதாகவும் உள்ளது!

இந்தியாவில் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் (Confirmed Positive for Covid-19) 42 சதவிகிதத்தினர் 21 வயதிலிருந்து 40 வயதுக்கு உட் பட்டவர்களேயாவார்கள்.

என்னே கொடுமை!

கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 17 சதவிகிதம் பேர்தான் 60 வயதுக்கு மேற் பட்ட வயது வரம்பு அடுக்கில்!

அமெரிக்காவோடு இதை ஒப்பிடும் போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களில்  32 சதவிகிதம்தான் - 20 வயதுமுதல் 40 வயதுள்ளவர்கள்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை

இந்தியாவில், நம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளவர்கள் 2,904 பேர்.

75 மரணங்கள் நிகழ்ந்துள்ளன (சனிக் கிழமை நிலவரப்படி) தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை 4 (இன்று காலை நிலவரப்படி).

மரணமடைந்தவர்களின் பட்டியலில் வயது பற்றிய தகவலை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை பகுத்து அளிக்கவில்லை.

20 வயதுக்குக் கீழே கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் 9 ஆகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆலோசனை அமைப்பு உடனடியாக வேகமான முறையில் Antibody  மற்றும் ரத்தப் பரிசோதனைகள் அடிப்படையில் வெளியிலிருந்து வந்தவர்களில் Evacuee Centres செய்யத் தொடங்கவேண்டும்.

இதன் பரிசோதனை முடிவு (Results) 15, 30 மணித் துளிகளில் தெரிந்துவிடும் என்றும் கூறியுள்ளது மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை.

அதிர்ச்சி தரும் தகவல்!

இப்போதுள்ள கரோனா நோயாளிகளில் 42 சதவிகிதத்தினர் 20 முதல் 40 வய துள்ள வர்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள்.

இளைஞர்களே,

வாலிபர்களே,

மிகவும் கவனமாக இதனைத் தடுக்க ஒத்துழையுங்கள்!

வயதானவர்களுக்குத்தான் வரும், நம்மை ஒன்றும் செய்யாது என்று நினைத்து ஊரடங்கை மீறி, வெளியே வருவது, இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி ‘ஜாலி ரைட்' - Adventure செய்யும் வீண் விபரீத வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

கரோனாவின் கோரப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர். சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். உங்களை நம்பியுள்ள உங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் இவர் களைப்பற்றியெல்லாம் ஒருகணம் சிந்தி யுங்கள் - தன்னைக் காத்து, தான் சார்ந்த குடும்பத்தையும், சமூகத்தையும் கரோ னாவின் கோரப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

அலட்சியம் வேண்டாம்!

வாழ வேண்டியவர்கள் நீங்கள்!

இளைஞர்கள் -வாலிபர்கள் - சாதிக்க வேண்டியவர்கள் நீங்கள் என்பதை மறவாதீர் - பொறுப்போடு நடந்துகொள் ளுங்கள்!

தனிமை - தூய்மை -  கட்டுப்பாடு கடைபிடியுங்கள்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.4.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக