தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி, சென்னையிலுள்ள காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காமராசர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது. இப்பேரணியில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், அனைத்து மத தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். (சென்னை, 10.5.2025)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக