வியாழன், 21 நவம்பர், 2024

காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?

 கருஞ்சட்டை

விடுதலை நாளேடு

கருஞ்சட்டை

புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு ஆளாகி, இன்று ஊடக வெளிச்சத்திற்காகப் பேட்டியளிக்கும் தமிழிசை சவுந்திரராஜன் விருதுநகரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேசியதற்குக் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் கூறியதாவது:
‘‘விருதுநகரில் மாபெரும் தலைவரை, ஒரு மாணவரை தேர்தலில் நிறுத்தி தோற்கடித்து அவரை நிலை குலையச் செய்தது திமுக. பெருந்தலைவரை திமுக வசை பாடியதையெல்லாம் காங்கிரஸ் மறந்திருக்கலாம். ஆனால், மக்களுக்கு என்றென்றும் ஞாபகத்தில் இருக்கும்.’’
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்மீது கண்மூடித்தனமான பற்றுகொண்டு, அதன் கருத்தியலோடு ஊறிப் போய்விட்ட தமிழிசை அவர்களுக்குப் பெருந்தலைவர் காமராஜர் ஆர்.எஸ்.எஸ். பற்றிக்கூறியது (7.11.1966) நினைவில் இருக்கிறதா?
இந்தத் தகவல்கள் எல்லாம் தமிழிசைக்குத் தெரியுமா?
தேர்தலில் யாரையும் எதிர்த்து, யாரும் நிற்கலாம்; இது ஜனநாயகத்தின் பாலபாடம்.

இதைக்கூட அறியாமல் விருதுநகரில் காமராஜரை ஒரு மாணவரை தேர்தலில் நிறுத்தித் தோற்கடித்ததை, தி.மு.க.மீது ஒரு குற்றச்சாட்டாக வைப்பது பரிதாபமே!
பசுவதைத் தடைக் கிளர்ச்சி என்ற பெயராலே, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான பச்சைத் தமிழர் காமராஜரை ஒரு பட்டப் பகலில் (7.11.1966) இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை தீ வைத்துக் கொளுத்தியது ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல்) என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு நாக்கைச் சுழற்றுகிறார் திருமதி தமிழிசை சவுந்திரராசன்.
உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஒரு நிமிடத்தில் காமராசரின் உயிரைக் காப்பாற்றியவர் ஒரு தி.மு.க. தோழர்.
காமராஜரைக் கொலை செய்ய முயற்சித்த கூட்டத்தின் அச்சு நகலான ஒரு கட்சியில் இருந்து கொண்டு, இப்படி அபாண்டமாக தி.மு.க.மீது குற்றம் சுமத்துவது பி.ஜே.பி.க்கு அழகுதான்!
அதைத்தான் திருமதி தமிழிசை சவுந்திரராசன் செய்கிறார். இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக