புதன், 1 மே, 2024

ஜாதி -வர்க்கப் பேதம் ஒழிப்போம்! தமிழர் தலைவரின் மே தின சூளுரை



விடுதலை நாளேடு
Published April 30, 2024
மே தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு
நாளை (மே முதல் நாள்) உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப் படும் திருநாள்!
உலகத்தினரை வர்ணத்தாலும், வர்க் கத்தாலும் பிரித்து வைத்து பேதப்படுத்தி சுரண்டிக் கொழுத்த சுயநல சக்திகளுக்கு எதிராக சூளுரைத்துத் தொழிலாளி வர்க் கம் வெற்றி கண்ட திருநாள் – வரலாற்றுப் பொன்னேட்டில் மிளிரும் உரிமை நாள்!
தந்தை பெரியாரும், திராவிடர் இயக்க மும் அடையாளம் காட்டிய அரிய திருநாள்!
‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அங்கே
காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்” என்று புரட்சிக்கவிஞர் கேட்டதோடு,
‘‘பொத்தல் இலைக்கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்”
என்று கவிதையைச் சொடுக்கினார்!
இன்று அதானிகளும், அம்பானிகளும், டாட்டா, பிர்லாக்களும் ஆகிய கார்ப்பரேட் கனவான்களின் ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., மோடி ஆட்சியாகி, விலைவாசி ஏற்றமும், வேலையில்லாக் கொடுமையும், சமூகநீதி வெறும் கானல் நீராகி வரும் நிலையை மாற்றிடும் வாய்ப்பாக, நடை பெறும் மோதலைக் கருவியாக்கி, அனை வருக்கும் அனைத்துமான சமதர்ம உல கினை சமைக்க ஒருங்கிணைந்து ஒன்று திரண்டு வென்று காட்டி, எதேச்சதிகார உயர்ஜாதி – உயர்வர்க்க காவி ஆட்சியை வீழ்த்திட, வீறுகொண்டு சூளுரைப்
போம்!
எமது மே தின வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30-4-2024

மே நாள் மேன்மை



விடுதலை நாளேடு
Published April 30, 2024

முனைவர் அதிரடி க. அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர்
திராவிடர் கழகம்

உலகின் ஆகச்சிறந்த – பரிணாமத்தின் உச்சநிலை உயிராக இருக்கும் இனம் மனித இனமாகும்.அம்மனித இனம் தோன்றிய காலமுதல் இன்றுவரை மனித இனத்திலும் – உலக இயற்கையிடத்தும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எண்ணற்றவை. உலகில் அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அறிவியல் உண்மைக்கு அறிவும் – உழைப்பும் அடிப்படை என்றால் அது மிகையில்லை.
அறிவார்ந்த உழைப்பே ஆக்கம் தரும். அயரா உழைப்பே அறிவை விரிவு செய்யும். அறிவின் உயர் எல்லையான பகுத்தறிவுதான் இன்றைய உலகின் கற்பனைக்கு எட்டா வளர்ச்சிக்கு அடிப்படை. அந்த அறிவை மனிதன் தன் உழைப்பால்தான் மிளிர வைக்கிறான் – ஒளிர வைக்கிறான்_ உயர வைக்கிறான்.
உழைப்பிற்கு இருக்கும் இந்த சிறப்பை மய்யப் படுத்தித்தான் பல சொலவடைகள்- பொன்மொழிகள் பிறந்துள்ளது.
உழைப்பே உயர்வு தரும்
உழைத்தால் தான் உயர்வு
உழைப்பால் உயர்ந்தோர்
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
-என பலவற்றைக் குறிப்பிடலாம். இந்த பெருஞ்சிறப்புக்குரிய உழைப்புக்கு ஊனம் ஏற்படுத்த, சுரண்டல் முறை தனது வீரியத்தை காட்டத்துணிந்தது. உலகை உருவாக்கும்- உன்னத வடிவமைக்கும்- உவமைக் கடங்கா நிலைக்கு உயர்த்திச் செல்லும் உழைப்பாளி களையும் அவர்களின் உழைப்பாற்றலையும், முதலாளித் துவம் சுரண்டத் தொடங்கியது.
உழைப்பாளிகளை உழைக்காது உறங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் உண்டு திளைத்தது. உழைப்பாளிகள் ஓடாய் மெலிந்தனர். உண்ண உணவின்றி நலிந்தனர்.
“சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே- முன்னர்
எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ!
உந்தன் வேரினிலே” -என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.
உழைப்பாளிகள், உழைப்பினால் வியர்வையை சிந்துவதாய்தான் உலகெங்கும் உள்ள கவிஞர்கள்- எழுத்தாளர்கள்- புரட்சியாளர்கள் பதிவிட்டுள் ளார்கள். பகுத்தறிவு நெறியில் சிந்தித்த கவிஞர், பெரியாரால் புரட்சிக்கவிஞர் என்று பாராட்டப்பட்ட கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மட்டும்தான் ‘சிந்தினர்’ என்ற சொல்லுக்கு மேலான ‘சொரிந்தனர்’ என்ற சொல்லால் பாராட்டியுள்ளார்.

உலக உழைப்பாளி வர்க்கம் தனது உழைப்பு சுரண்டப்படுவதை எதிர்த்து, 8 மணி நேரம் உழைப்பு-8 மணி நேரம் குடும்பத்தோடு குதூகலம் – 8 மணி நேரம் ஓய்வு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1886- மே, 1-ஆம் நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சிகாகோ, நியூயார்க், பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்காவின் பல நகரங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற் றனர். இதில் 1200க்கு மேற் பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்தப் போராட்டம் வெகு சிறப் போடு வெற்றிகரமாக நடைபெற்றது.
1886 மே, 3ஆம் நாள் “மெக்கார்மிம்” நிறுவன வாயிலில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4-தொழிலாளர்கள் பலியானதுடன், 50 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சிகாகோ நகரில் “ஹேமார்க்கெட்” சதுக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியா னோர் எண்ணிக்கையே தெரியவில்லை.
நிறுவனங்களின் அதிபர்கள் (முதலாளிகள்) தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஏழு பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.

இந்நிகழ்வு உலகத்தையே குலுக்கியது. அமெ ரிக்கத் தொழிலாளர்கள் தொடங்கிய 8 மணி நேர உழைப்பு எனும் போராட்டம், அப்போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்நீத்த சிகாகோ தொழிலாளர் களின் உயிர்த் தியாகம் உலகெங்கும் காட்டுத்தீயாய் பரவியது. 8 மணி நேர உழைப்பு என்ற தொழிலாளர்களின் உரிமை முழக்கம் வென்றது. அதன் காரணமாகத்தான் இன்று உலகமெங்கும் மே, 1- தொழிலாளர் நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதல் மே நாள் கொண்டாடி யவர் ம. சிங்காரவேலர். 1933 மே 21ஆம் நாள் மே தினக் கூட்டம் நடத்திய பெருமைக்குரியவர் இவரே.

தமிழ்நாட்டில் முதன்முதல் மே நாள் விழா கொண்டாடிய கட்சி பெரியாரின் சுயமரியாதை இயக்கம். மே 23, 1933-இல் சமதர்ம ஊர்வலம் சமதர்ம சங்கீதங்களுடன் கூட்டங்களை நடத்தி கொண்டாட வேண்டும் என்று தந்தை பெரியார் 14.05.1933 குடி அரசில் அறிவித்தார். நாடெங்கும் மே நாள் நிகழ்ச்சிகள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் மே நாள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல், மே தினப் பூங்கா தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில்- “உலகத் தொழி லாளர்களே ஒன்றிணை வோம்” என்கிற ஒற்றை வரி தத்துவத் தினை உணர்த்திடும் உழைப் பாளர் சிலையும் நிறுவப்பட் டுள்ளது.

போராடிப் பெற்றிட்ட உழைப்பாளர் உரிமை- உலகை உலுக்கிய உழைப்பாளர் உரிமைக்குரல் அன்று வங்கிகள் மற்றும் பேருந்துகள், தேசிய உடைமையாக்கல் எனும் கொள்கைத் தளத்தில் பல புரட்சிகளை நடத்தியது. இன்றோ ஆளும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு அனைத்து அரசுத்துறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கும் பணி யால், பொதுத்துறைகளை அம்பானி, அதானி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பு செய்வதால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி- சமூகநீதியை ஆழக்குழி தோண்டி புதைக்கும் ஆபத்தை செய்துவருகிறது.
உழைக்கும் வர்க்கம்- அறிவை வளர்க்கும் அணியினர் அயர்ந்தால் ஆபத்து வென்றுவிடும். இந்தியாவில் மே நாள் ‘மேனாள்’ ஆனது என்று எழுதும் நிலையை எட்டி விடும். விழிப்புடன் இருப்போம். உழைப்பாளர் விழுமியம் காப்போம்,
உழைப்பாளர்களே! ஒன்று கூடுங்கள்!
மே நாள் வாழ்த்துக்கள்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க. அரும்பெரும் 36 வாக்குறுதிகளை கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!



Published March 20, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 20- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.3.2024) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப்பதில் அளித்தார். அடுத்து, இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுக போட்டி யிடுகின்ற 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். புதிதாக 11 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக திமுக தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர், திமுக துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப் பினருமான கவிஞர் கனிமொழி தேர்தல் அறிக்கையை தயா ரிப்பதில் பொதுமக்கள் பங்களிப்புகுறித்து விரிவாக எடுத் துரைத்து, அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து, தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (20.3.2024) காலை வழங்கினார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ் நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலுக்கு முன்னதாக கனிமொழி எம்.பி தலை மையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப் பட்டது. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர் களது குரல்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் இடம் பெற்ற முக்கிய வாக்குறுதிகள்:

1. மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
2. ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர் களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
3. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக் கப்படும்.
4. புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
5. ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப் படும்.
6. ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
7. அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
8. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
9. தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
10. ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
11. புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
12. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
13. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
14. இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங் கப்படும்.
15. தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக் கப்படும்.
16. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச் சிக்கு குழு அமைக்கப்படும்.
17. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
18. பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
19. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
20. வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
21. குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
22. ஒன்றிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படும்.
23. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
24. வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயி களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (விஷிறி) செய்யப்படும்.
25. இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
26. விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப் படுத்தப்படும்.
27. LPG சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.
28. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
29. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.
30. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படும்.
31. பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.
32. ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
33 . மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
34. ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
35. இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல் படுத்தப்படும்.
36. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக் கப்படும்.

 

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, மார்ச் 20 நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டி யலை தி.மு.க. இன்று (20-3-2024) வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று (20-3-2024) வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-

வட சென்னை – கலாநிதி வீராசாமி
தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை – தயாநிதிமாறன்
சிறீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் (தனி) – க.செல்வம்
அரக்கோணம் – எஸ்.ஜெகத்ரட்சகன்
வேலூர் – கதிர் ஆனந்த்
தருமபுரி – அ.மணி
திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
ஆரணி – தரணி வேந்தன்
கள்ளக்குறிச்சி – மலையரசன்
சேலம் – செல்வ கணபதி
ஈரோடு – பிரகாஷ்
நீலகிரி (தனி) – ஆ.இராசா
கோவை – கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
பெரம்பலூர் – அருண்நேரு
தஞ்சாவூர் – முரசொலி
தேனி – தங்க தமிழ்செல்வன்
தூத்துக்குடி – கவிஞர் கனிமொழி
தென்காசி (தனி) – ராணி சிறீகுமார்

புதன், 27 மார்ச், 2024

தந்தை பெரியார்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றம் – நீதிமன்றங்களை சந்திக்கத் தயாராக இருக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை



விடுதலை நாளேடு
Published March 22, 2024

* இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிப்பதை எதிர்ப்பதா? பெரியார்பற்றி அவர் பாடக் கூடாதா?
* வன்முறையை எந்த நிலையிலும் ஆதரிக்காதவர் தந்தை பெரியார்
*தந்தை பெரியார்மீது சம்பந்தமே இல்லாமல் பாடகிகள் இருவர் அவதூறு பரப்புவதன் நோக்கமென்ன?
*  அவதூறுகளைப் புறந்தள்ளி பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது அளிப்பதில் உறுதிகாட்டும் மியூசிக் அகாடமிக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்!

இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிக்க இருப்பதாக அறிவித்த நிலையில், இரு பார்ப்பனப் பாடகிகள், டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் பற்றி எல்லாம் பாடி இருக்கிறார் என்றும், பெரியார் வன்முறையாளர் என்றும் தந்தை பெரியார்பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியும், பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பும் தெரிவித்து வருவதைக் கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணா வுக்கு அவர்களுக்கு சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பு இவ்வாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இசைத் துறையில் புகழ் பெற்ற
டி.எம். கிருஷ்ணாவுக்கு விருதும் – எதிர்க்கும் சக்திகளும்!
கர்நாடக இசைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும், கருநாடக இசையைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும், இறுக்கமாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாறாக அதன் ஆய்வில் கவனம் செலுத்துவதன் மூலமும் கலையின் கேட்போர் தளத்தை விரிவுபடுத்து வதற்கு அவர் பணியாற்றியமைக்காகவும், சமூக சீர் திருத்தத்திற்கான ஒரு கருவியாக இசையைப் பயன் படுத்துவதற்காகவும் இவ் விருது வழங்கப்படுவதாக அவ் வமைப்பு கடந்த மார்ச் 17 அன்று அறிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மியூசிக் அகாடமி இத்தகைய விருதுகளை அறிவிப்பதும், அவ் வமைப்பின் உயரிய விருதான சங்கீத கலாநிதி பெறுபவரை அவ்வாண்டின் இறுதியில் நடக்கும் இசை விழாவுக்குத் தலைமையேற்கச் செய்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.

அவ் வகையில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1 வரை நடைபெறும் விழாவிற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமையேற்பார் என்றும் அறிவிப்புச் செய்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 20-ஆம் தேதியன்று, அதே இசைத் துறையில் உள்ள ரஞ்சனி, காயத்ரி ஆகி யோர், டி.எம்.கிருஷ்ணா தலைமை யில் நடைபெறும் விழாவில் தாங்கள் பங் கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதனை மியூசிக் அகாட மியின் தலைவருக்குத் தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் இது குறித்து பரப்பினர். விருதுத் தேர்வு தொடர்பான கருத்து அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.
ஆனால், அதற்கு அவர்கள் தந்தை பெரியாரைத் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள காரணம், உண்மைக்கு மாறானதும், அறியாமையின் பாற்பட்டதும், சமூக – ஜாதி வெறுப்புணர்ச்சியினால் தூண்டப்பட்டதுமாகும். (அவர் களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.)
தன்னுடைய பாணியில் கர்நாடக இசையைச் சபாக்களைத் தாண்டி, சென்னை தெருவிழாக்களிலும், அதன் பாடுபொருள்களை சுற்றுச் சூழல் பாதுகாப் பிற்காகவும், ஜாதி – மதவாதங்களுக்கு எதிராகவும் அமைத்துக் கொண்ட டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கப்படுவதற்கான அறிவிப்பில் அவரு டைய சமூகப் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது மியூசிக் அகாடமி.

இசை மேதை டி.எம். கிருஷ்ணா ஜாதி, மத, உணர்வு களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதநேயர் (A Humanist). “மனித குலத்தை ஒரு குலமாகக் கருதி, காற்றும், மழையும், சூரிய ஒளியும் எப்படி மானுடத்திற்கு இயற்கை அளித்த பொது உரிமையுள்ள பொது உடைமைகளோ அதுபோல, இசையின்பமும்கூட அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் ஓர் அற்புத ஊற்றாக, அனைவருக்கும் உரிய பொதுச் சொத்தாக்க வேண்டும்! யாருக்கும் எட்டாது, ஒரு சிலருக்கே என்ற ஏகபோகத்தை மாற்றி திறமையும் – புதுமையும் – புத்தாக்கங்களும் (Innovation) இசையிலும் புகுத்தப்பட வேண்டும். இசையை ஜாதிக் கண்ணாடி போட்டு பார்ப்பது தவறு” என்ற புதிய பார்வை கொண்டவர்.
இதன் காரணமாக அவர் ஒரு பெரியார் பற்றாளர்கூட.
கடந்த ஆண்டு, வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய இசை மற்றும் குரலிலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் வரிகளிலும் “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல் வெளியானது. இவை தான் மேற்சொன்ன பாடகிகள் இருவரின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாகி யுள்ளது.

டி.எம். கிருஷ்ணாவின் முயற்சிகளிலும், அவரது சமூக – அரசியல் நிலைப் பாடுகளிலும் முரண் பாடுகள் யாருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள் முழுக்க தந்தை பெரியாரின் மீதான அவதூறும் வெறுப்புணர்வும் நிரம்பியவை ஆகும்.
தந்தை பெரியார் மனித நேயத்துக்காகவும், சமத் துவம் – சமூகநீதிக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடிய உலகத் தலைவராவார். தந்தை பெரியாரின் கருத்துகள் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி, உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்படுவதும், சமூகநீதிக்கான அடையாளமாக தந்தை பெரியார் கொண்டாடப்படுவதும் பெரியார் உலகமயமாகி வருவதும், அவர்களை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. அதன் காரணமாகவே, இனப் படுகொலையை முன்மொழிந்தவர் என்று அவரைப் பற்றி திட்டமிட்டு, தொடர்ந்து சில பார்ப் பனர்கள் இட்டுக் கட்டி ஆங்கிலத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
(கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மாநாடு வரை இவர்களின் அவதூறு பரப்பும் முயற்சிகள் தொடர்ந்தன.) இன்று அதனையே கர்நாடக இசைப் பாடகிகளான மேற்சொன்ன இருவரும் தங்கள் பதிவில் எழுதியுள்ளனர்.

வன்முறையைத் தவிர்த்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புவதா?
உலகிலேயே வன்முறையை நாடாமல், ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திய தலைவர் தந்தை பெரியார். உலகில் வேறெங்கும் இல்லாத வர்ணாசிரம – ஜாதி – தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சமரசமற்ற கருத்துப் போர் நடத்தி, அதற்காகவே சுயமரியாதை இயக்கம் கண்டு, திராவிட இயக்கத்தை வழிநடத்தி, அதில் வெற்றியும் கண்டு வருபவர் தந்தை பெரியார். காரணம், அவர் ஓர் தனி மனிதரல்லர் – தத்துவம்! உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னும், அவரது கொள்கைகள், போராட்டங்கள் தான் இன்றும் வெற்றி பெறுகின்றன. இத்தனைப் பெரிய சமூகப் போராட்டத்தில் எந்த இடத்திலும் வன்முறையில் ஈடுபடாமல் ஓர் அமைதிப் புரட்சி இயக்கமாக இதை உருவாக்கி, வழிநடத்தியவர். இன்று வரை அந்தப் பாதையில் தடம்மாறாமல் திராவிடர் கழகம் நடை போடுகிறது. தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு சமூகத்திற்காகப் போராடும் கருப்பு மெழுகுவர்த்திகள் தந்தை பெரியாரின் தொண்டர்கள். போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று, தாக்குதல்களுக்கு உள் ளாகி பெரியார் தொண்டர்கள் உயிரைத் துறந்ததுண்டு. ஆனால், அப்போதும் நாம் வன்முறையை நாடிய தில்லை.

காந்தியாரைப் படுகொலை செய்த கால கட்டத்தில்கூட, பார்ப்பனர்கள்மீது ஏவாமல் அமைதியை நிலைநாட்டியவர் தந்தை பெரியார்
இந்துத்துவ வெறியன் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனரால் காந்தியார் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டபோது, இந்தியா முழுவதும் கலவரங்கள் நடை பெற்றன; மராட்டியத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மீது துளி வன்முறைகூட நிகழாமல் காப்பாற்றியவர் தந்தை பெரியார். அகில இந்திய வானொலியில் உரையாற்றி, அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகத் தக்க வைத்த மனிதநேய மாண்பாளர் அவர்.
குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜாதி ஒழிப்புப் போராட்டம் என வாழ்நாள் முழுக்க போராட்டங்களால் பொழுதளந்தவர் – தந்தை பெரியார் இவற்றில் எங்கேனும் வன்முறையைக் கைக் கொண்டவரல்லர். அதனால்தான் இன்றளவும் போற்றப்படுகிற தலைவராக அவர் இருக்கிறார்.

இராயப்பேட்டை யுவர் சங்கக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குத் தந்தை பெரியார் கூறிய அறிவுரை
05.01.1953-இல் இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (பார்ப்பன இளைஞர்களால் நடத்தப்பட்ட அமைப்பு) பெரியார் ஆற்றிய உரை, பார்ப்பன எதிர்ப்பு எத்தகையது என்பதைத் தெளிவாக விளக்கும் ஒன்றாகும். “பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம், நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பது தான். இது பிராமணர்களை வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்ன தாகவோ, அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை” என்று அந்தக் கூட்டத்திற்காக மட்டுமல்ல; தன் வாழ்நாள் இறுதி வரைக்கும் வன்முறையின் பக்கம் இந்த இயக்கத்தை நடத்திடாமல், இன்றைக்கும் அறவழிப் போராட்ட இயக்கமாகவே இதனை நடத்தி வருவதற்கும் வழிகோலியவர் தந்தை பெரியார்.
அவரை வன்முறையாளர் என்றும், இன்னும் அதிகப்படியான வார்த்தைகளால் இனப்படுகொலையை முன்மொழிந்தவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவதும், இழிவு செய்வதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்டனத்திற்குரியவையாகும்.
எந்த பேதமும் இல்லாமல் மனித குலம் வாழ வேண்டும் என்பதே அவரது தத்துவம், நோக்கம், செயல்பாடுகள் அத்தனைக்கும் அடிப்படை.

பார்ப்பனப் பெண்களின் விடுதலைக்கு
தந்தை பெரியாரின் பங்களிப்பு உண்டே!
தந்தை பெரியார் இல்லையேல் பெண்ணடிமைத் தனம் இந்த நாட்டில் நீங்கியிருக்க வழி உண்டா? தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் மட்டுமானது அல்லவே! அவருடைய கருத்துகள் தானே பார்ப்பனர் சமூகத்திலும் புரட்சியை உண்டாக்கின. விதவை என்று கூறி, மொட்டையடிக்கப்பட்டு, முக்காடிட்டு மூலையில் அமர்த்தப்பட்ட கொடுமைகள் எல்லாம் மறைந்து, பார்ப்பன மகளிரும் தங்கள் சுயமரியாதையைப் பெறுவதற்குத் தந்தை பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும், செயல்பாடும் தானே காரணம்!

வர்ணாசிரம, ஜாதி, பாலின அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கும், பாகுபாடுகளுக்கும், அனைத் துத் துறையிலும் இதே நிலை கோலோச்சி வந்ததற்கும் எதிராகப் போராடிய தந்தை பெரியார், அப்படி ஆதிக்கம் செலுத்தியவர்களையும் திருத்தி, சமத்துவ நிலைக்குக் கொண்டு வரவிரும்பி உழைத்தவரே அல் லாமல், அவர்களை அழிக்க நினைத்தவர் அல்லர்.
பெரியார் மீதான அவதூறுகளையும், அவரை வன்முறையாளராகச் சித்தரிக்கும் போக்கையும் தொடர்ந்து ஒரு சிலர் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். பலமுறை அவை பொய்கள் என்பது நிரூபிக்கப்பட்டும், உண்மை நிலையை உணர்ந்தும் கூட தொடர்ந்து இதனைப் பரப்புவது கயமையானதாகும்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பேசியுள்ள இருவருக்கு ஆதரவாக அரிகதா நடத்தும் துஷ்யத்து சிறீதர், விஷாகாஅரி, சித்ரவீணாரவிகிரண் உள்ளிட்ட இன்னும் சிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பெரியார் என்பவர் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக உயர்ந்து நிற்பதைச் சகிக்க முடியாத வெறுப்புணர்ச்சி தான் இத்தகைய நிலைப்பாடுகளுக்கும், அவதூறு களுக்கும் காரணமாகும்.
சம்பந்தப்பட்ட மியூசிக் அகாடமி அமைப்பின் தலைவர் திரு.முரளி அவர்கள் இசைக் கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி ஆகியோருக்கு எழுதிய பதிலில், தனக்கு எழுதப்பட்ட கடிதம் பொது வெளியில் பகிரப்ப ட்டதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். மேலும், விருதுக்கான தங்கள் தேர்வில் உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் அரியக்குடி, ராமானுஜ அய்யங்காரின் எதிர்ப்பும், ‘குடிஅரசு’ இதழில் கலைஞர் எழுதிய ‘தீட்டாயிடுத்து’ என்ற கட்டுரையும்
1946-ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ‘தீட்டாயிடுத்து’ என்னும் தலைப்பில் எழுதிய துணைத் தலையங்கத்தை (09.02.1946) இந்தச் சூழலில் நினைவூட்டுவது பொருத்த மாகும்.
திருவையாறு தியாக ராயர் உற்சவத்தில் (கர்நாடக இசை மேடையில்) தமிழ ரான தண்டபாணி தேசிகர், ‘சித்தி விநாயகனே’ என்று தமிழ்ப் பாட்டு பாடியதற்காக, “தமிழில் பாடி, சந்நிதானத் தைத் தண்டபாணி தேசிகர் தீட்டுப்படுத்தி விட்டார்; நான் அதே மேடையில் பாட மாட்டேன்” என்று அரியக்குடி இராமானுஜ அய்யங்கார்கள் அரற்றியது 1946-ஆம் ஆண்டோடு முடிந்துபோகவில்லை; அதே நிலை தான் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்கிறது என்பதற்கு இப்போது சங்கீத கலாநிதி விருது பெறவுள்ள நண்பர் டி.எம்.கிருஷ்ணா தலைமை யேற்கும் நிகழ்ச்சியில் “பாட மாட்டோம்” என்று பாடகிகள் இருவர் தெரிவித்திருக்கும் எதிர்ப்பே சான்றாகும்.

போராட்டம் இரண்டு தத்துவங்களுக்கிடையில்! அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும், அனை வரும் சமம், அனைவருக்கும் உரிமை வேண்டும், மொழி, இன பேதம் கூடாது என்று கருதும் சமத்துவத் திற்கு எதிராக எதிலும் மேல்-கீழ் இருக்க வேண்டும். எதுவும், யாரும் சமமில்லை, தமிழ் நீச பாஷை, தமிழர்களின் கலையுடன் கர்நாடக இசை கலக்கக் கூடாது என்று கருதும் போக்குக்கும் நடக்கும் போராட் டமே இது! தன்னுடைய தளத்தில் நின்று, தான் கற்ற கலையை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும், அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து, இசைந்து செயல்படுத்திவரும் டி.எம்.கிருஷ்ணாவின் செயல்களே – இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை, மேற் சொன்ன இருவரின் எதிர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

முற்போக்குக் கருத்துக்களை முன் வைத்துப் பாடினால், அது அவதூறா – இழுக்கா?
கர்நாடக இசைக்கு அவர் சேதம் ஏற்படுத்தி உள்ள தாகவும், இசையில் ஆன்மீகத்துக்கு டி.எம்.கிருஷ்ணா இழுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பதை வெட்கப்படத்தக்கதாகக் கருதும் அளவுக்கு அவரது செயல்கள் ஆக்கியுள்ளன என்றெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அவர்கள் இன்னார் என்பதை அடையாளம் காட்டுகிறது.

கலை அனைவருக்கும் பொதுவானதே!
கலை அனைவருக்குமானது, கலையில் மக்களின் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்ற கருத்தைத் தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
டி.எம்.கிருஷ்ணா எங்கு பிறந்தார் என்பது முக்கிய மில்லை; அவர் எதை முன்னிறுத்துகிறார் என்பதே முக்கியம். சமத்துவத்திற்கான குரல் எங்கிருந்து வந்தா லும், அதைக் கரம் நீட்டி வரவேற்க வேண்டியது நமது கடமை!
டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக, ஏராளமான பார்ப்பன நண்பர்களும் குரல் கொடுத்திருப்பதும், கலை அமைப்புகள் ஆதரவாக நிற்பதும் வரவேற்கத் தக்கனவாகும்.
அவசியமற்ற இந்த சர்ச்சை எழுந்த பின்னாலும், விருது தேர்விலும், தங்கள் நிலைப்பாட்டிலும் மிக உறுதியாக நிற்கும் மியூசிக் அகாடமி அமைப்புக்கும், அதன் தலைவர் திரு.முரளிக்கும் நமது பாராட்டுகள் வாழ்த்துகள்!
நண்பர் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல சிறப்புகளைப் பெற்றவர் என்றாலும், அவரது சமூகக் கருத்துகளுக்காகவே அவர் எதிர்க்கப்படுகிறார் என்றால் அவரை ஆதரிக்க வேண்டியதும் நமது கடமை! அதே வேளையில், அவருடைய கருத்துகளுக்கு எதிராகப் பேசுகிறோம் என்ற பெயரில் வன்மத்தைக் கக்கும் அனைவரின் சிந்தனையும் இன்னும் வர்ணாசிரமத்தில் இருந்து மீளவில்லை என்பதும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பெரியார்மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் சந்திக்க நேரும்.
இசைத்துறையைச் சார்ந்த இரண்டு பெண்களை முன்னிறுத்தி, இந்தச் சூழலில் இதைப் பொதுத் தளத்தில் விவாதிக்கச் செய்து, இதன் பின்னணியில் இருந்து இயங்குவோரையும் தந்தை பெரியார் மீது அவர்கள் அவதூறு பரப்புவதையும், அவரை இழிவு செய்வதையும் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது!
இப்படி பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அவர்களே ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பது உறுதி!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.3.2024

வியாழன், 14 மார்ச், 2024

கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம்! வெற்றி நமதே!! (தகவல் தொழில் நுட்பக்குழுக் கூட்டம்)


விடுதலை நாளேடு

 

தகவல் தொழில் நுட்பக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்!

திருச்சி, மார்ச் 3; கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம், வெற்றி நமதே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழுவின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நேற்று (2-3-2024) திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழுக் கலந்துரையாடல் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! யாருமே எதிர்பார்க்காத வகையில் பெருந்திரளாக இங்கே கூடி இருக்கின்றீர்கள்! உங்களின் உற்சாக வருகை பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!

நம்மால் முடியும்!
சென்ற மாதம் 24-2-2024 அன்று சென்னை பெரியார் திடலில் மாநில இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் புதிதாக 110 பேருக்கு “ட்விட்டர்” கணக்கு தொடங்கப்பட்டு, சில பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அவ்வகையில் தோழர்கள் பதிவிட்டு, ஒவ்வொரு பதிவின் கீழும் “ஸிமீழீமீநீt ஙியிறி”, “மக்கள் விரோத பாஜக” என்கிற அடைமொழி கொடுக்கப்பட்டது!
சரியாக 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகு “ட்விட்டர்” கணக்கை மேற்பார்வையிட்ட போது, கழகத் தோழர்கள் 110 பேரின் பதிவுகளை, 2800 பேர் பகிர்ந்திருந்தனர் (ஷிலீணீக்ஷீமீ). இந்தப் பதிவுகளுக்குச் சுமார் 50 ஆயிரம் பேர் விருப்பம் (லிவீளீமீs) தெரிவித் திருந்தனர். மிக முக்கியமாக, “ஸிமீழீமீநீt ஙியிறி”, “மக்கள் விரோத பாஜக” என்பது “ட்ரெண்டிங்” (ஜிக்ஷீமீஸீபீவீஸீரீ) என்கிற நிலையை அடைந்தது!

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த…
ஒவ்வொரு தேர்தலின் போது பாஜக பல முழக்கங் களை முன் வைக்கும். நல்ல காலம் பிறக்கிறது என்றும், வளர்ச்சி நோக்கி வருகிறோம் என்றும், வேலை வாய்ப்புகளை கோடிக்கணக்கில் உருவாக்கு வோம் என்றும் கூறுவார்கள். ஆனால் எதையுமே அவர்கள் செய்ததில்லை. மாறாக பொய்யான வாக்குறுதி களாகவே அவை இருக்கும்!
அதுவும் சமூக வலைத்தளங்கள் வளர்ந்த பின்னர், கண்மூடி கண் திறப்பதற்குள் பொய்ச் செய்திகளைப் பரப்பிவிடுகின்றனர். உண்மைச் செய்திகள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற் காகவே இந்தப் பொய்களைப் பரப்புகின்றனர்! போர் நடக்கும் போது, ஆயுதத் தாக்குதலை விட, உளவியல் தாக்குதல் அதிகம் முக்கியத்துவம் பெறும். அதே பாணியில் தான் பாஜகவும் செயல்படுகிறது! வதந்திகளைப் பரப்புவது, மிகையான செய்திகளை உருவாக்குவது, கலவரச் சூழலை ஏற்படுத்துவது என முற்றிலும் மனித விரோத செயலைச் செய்து வருகிறார்கள்.

“கவுண்டவுன்” தொடங்கும் நேரம்!
இங்கே அரங்கம் நிறைந்து தோழர்கள் இருக்கின் றீர்கள். இதில் கைப்பேசி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாம் ஆதாரப்பூர்வமான, உறுதி செய்யப்பட்ட தகவல்களையே பதிவு செய்ய வேண் டும். அதற்குரிய செய்திகளைத் தலைமை நிலையத் தில் இருந்து தயார் செய்து தருகிறோம். நீங்கள் அதை ‘விநியோகம்’ செய்தால் மட்டும் போதுமானது.
விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக் கிறார்கள். அதனைத் தொடர்ந்து “கவுண்டவுன்” தொடங்கிவிடும். தேர்தல் முடியும் வரை, ஏனைய பணிகளைத் தவிர்த்துவிட்டு, அவரவர் வாய்ப்பிற்கு ஏற்ப உத்வேகமாகச் செயல்பட வேண்டும்! உயிர் அச்சம் இருந்த கரோனா காலத்தில் கூட, தொடர்ந்து காணொலி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர்கள் நாம்!

பக்குவமாகக் கையாள்வோம்!
பொதுவாகச் சமூக ஊடகங்களில் அனைத்துத் தோழர்களுமே சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். அதே நேரம் எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, அதைப் பரப்பிட வேண் டும். அதற்கான குழு ஒன்று தலைமைக் கழகத்தால் உரு வாக்கப்படும். அதில் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், வி.சி.வில்வம் ஆகியோர் செயல்படுவர். குழுவும் விரிவாக்கம் செய்யப்படும்.
அக்குழு சொல்லும் ஒருமித்த முறையைக் கையாளுங்கள்! எதிர்வரும் 100 நாள்களில் நம் செய்திகள், இலட்சக்கணக்கில் செல்ல வேண்டும். பேருந்துகளில், இரயில் பயணங்களில், நிகழ்ச்சிகளில், திருமண வீடு களில் என எங்கிருந்தாலும் செய்திகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்!
நம்மிடம் அறிவியல் கருவிகள் இருக்கிறது, அறிவு, ஆற்றல் இருக்கிறது, நல்ல வாய்ப்பும் இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் ஊடகப் பணிகளில் திட்ட மிட்டு செய்திட வேண்டும்! சமூக ஊடகங்களில் பதி விடும் போது அல்லது பிறருக்குப் பதில் கூறும் போது கோபம், வேகம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை இருக்கக் கூடாது! பொய்யும், புரட்டும் கொண்டவர்களை நாம் பக்குவமாகக் கையாள வேண்டும். நாம் அளிக்கும் பதில்களால் மற்றவர்கள் நமது நியாயங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்!

தனி மரம் தோப்பாகாது!
அந்தளவிற்குச் சிறப்பான தத்துவம் நம்மிடம் இருக்கிறது. உண்மையை மட்டுமே பேசக் கூடியவர்கள் நாம்! அதுவும் ஆதாரத்துடன் பேசுவோம்! சமூகத்தைக் காக்கும் பொறுப்பு மற்றவர்களை விட, நமக்குக் கூடுத லாக இருக்கிறது! நம் பணி என்பது நன்றி பாராத தொண்டு! நம் கொள்கைகள் எண்ணிக்கையைச் சார்ந் தது அல்ல; மாறாக எவ்வளவு ஆழமானது என்பதைப் பொறுத்தது!
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களின் உழைப்பை நாம் பயன்படுத்த வேண்டும்!
ஒரு கை ஓசை ஒலி தராது; தனி மரம் தோப்பாகாது! எனவே ஒருங்கிணைந்து செயல்படுவது மிக, மிக முக்கியமானது!

கற்கும்போது என் வயது 91 அல்ல, 19!
ஊடகங்களில் எளிதாகச் செயல்பட புதிய உத்திகளை நாம் கையாள இருக்கிறோம்! நானும் கூட‌ ஊடகங்களில் செயல்பட மேலும் சில செய்திகளைக் கற்க வேண்டும். எனினும் நான் விடமாட்டேன். அதுபோன்ற நிலைகளில் என் வயது 91 இல் இருந்து, 19 ஆக மாறிவிடும்.
காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது என்பார்கள். ஒருபோதும் காடு வா வா என்று சொல்லாது, வீடு போ போ என்றும் சொல்லாது. அதை நாம் கேட்க வும் கூடாது. எப்போதும் நாம் நம் பணிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் என் றென்றும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன். கற்றுக் கொண்டே இருக்கிறேன். பயிற்சி வகுப்பாக இருந்தால் கற்றுக் கொள்வதற்கு முதல் மாணவனாகப் பதிவு செய்திடுவேன்!

உலகம் ஊடகமயம்!
சமூக வலைதளங்களில் தான் இன்று உலகம் இயங்கி வருகிறது‌. தமிழ்நாட்டில் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும், மாலை 4 மணிக்கு விடுதலை நாளிதழை இணையம் வழி படித்துவிடலாம். ‌புதிய சிந்தனைகளை யார் கொடுத்தாலும், ஏற்க வேண்டும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் எனும்‌ நிலை மாறி, எப்பொருள் யார் யார் கை மூலம் வந்தாலும் பின்பற்ற வேண்டும்!

“சிக்கென” பிடியுங்கள்!
நல்ல மனிதர்களை எப்போதும் “சிக்கென” பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி காமராஜர் அவர்களைச் சிக்கென பிடித்துக் கொண்டதால் தான் தமிழ்நாட்டிற்குக் கல்வி வளர்ச்சி வந்தது! அதேபோல எம்ஜிஆர் அவர் களைப் பிடித்துக் கொண்டதால் தான், வருமான வரம்பு நீக்கம் செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு அளவும் அதிகரிக் கப்பட்டது. அதேபோல ஜெயலலிதா அவர்கள் மூலம், 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குச் சட்டப் பாதுகாப்பு பெறப்பட்டது. இன்றைக்குப் பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி எடுக்கும் சாதனையைச் செய்து மேலும், மேலும் சிறப்பான ஆட்சி செய்து வரும் நமது ஒப்பற்ற முதல்வர், சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பெற்றுள்ளோம்!
2024 தேர்தல் வெற்றி என்பது நம் கொள்கைக்குக் கிடைக்கும் வெற்றியாகக் கருதப்படும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், டாக்டர் கலைஞர் ஆகியோர் போராடித் தந்த உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்! எனவே அதிகக் கவனம் செலுத்தி, மனதை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வேண்டும்!

வேண்டும் திராவிட இந்தியா!
புதிய தமிழ்நாடு மட்டுமின்றி, திராவிட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இந்தியா முழுவதுமே திராவிடர்கள் தான் வாழ்ந்தார்கள் என அண்ணல் அம்பேத்கர் ஆதாரத்துடன் எழுதியுள்ளார். பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமது அடுத்த தலைமுறை வெகுவாகப் பாதிக்கப்படும். சமூகமும் அமைதியை இழக்கும். எனவே தகவல் தொழில் நுட்பக் குழுவின் கூட்டத்தின் வாயிலாக உறுதிமொழி ஒன்றை ஏற்போம்!
உண்மைகளைத் தொடர்ந்து பரப்பிடுவோம்! எதிரி களின் முகத்திரையைக் கிழித்திடுவோம்! பொய்யை அகற்றிடுவோம்! மெய்யை நிலை நிறுத்துவோம்! திராவி டம் வெல்லும்; வரலாறு சொல்லும்! கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாகக் கொண்டு செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்!! எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்கள்.

பயிற்சி வகுப்புகள்!
முன்னதாகத் தொடங்கிய நிகழ்வில், கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் வாட்சப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களில் எளிமையாகப் பணியாற்றுவது குறித்தும், புதிய நுட்பங்கள் குறித்தும் “புரஜெக்டர்” மூலம் திரையிட்டுக் காட்டப்பட்டது. சுயபடிவம் கூட, னிஸி சிளிஞிணி மூலமே பூர்த்தி செய்யப்பட்டது.
வயது 15 தொடங்கி, 80 வரை அனைவரும் ஆர்வ முடன் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தோழர்கள் வருகை தந்தனர்! மொத்தம் 350 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது!

பங்கேற்றோர்!
செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், புதுச் சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலை மைக் கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், மதுரை வே.செல்வம், க.சிந்தனைச் செல்வன், ஆத்தூர் சு.சுரேசு, குடந்தை க.குருசாமி, திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி க.நா.பாலு, இலால்குடி ப.ஆல்பர்ட், காவேரிபட்டிணம் திராவிடமணி, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகங்களின் தோழர்கள் அனைவரும் பங்கேன்றனர்.
நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர்!

 


 ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர்!

புதன், 13 மார்ச், 2024

ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  Published March 12, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 12 ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப் படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்று (12-3-2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாள்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று (11-4-2024) அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப் புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றி லும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத் தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
இதன் காரணமாகத்தான், தமிழ்நாடு அரசு அமைந்த வுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடை முறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டி யிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறை வேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வலி தாங்க முடியாமல் திசை திருப்புவதா?

 

விடுதலை நாளேடு
2019 இல் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை 5 ஆண்டுகளுக்குப் பின் 
இப்பொழுது அவசர அவசரமாகக் கொண்டு வருவது ஏன்?
பாசிச பா.ஜ.க.வைத் துடைத்தெறிவது குடிமக்களின் கடமையாகும்!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தேர்தல் பங்கு பத்திரப் பிரச்சினையில் ஒன்றிய பி.ஜே.பி. அரசின்மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வலி தாங்க முடியாமல், திசை திருப்பும் நோக்கோடு, 5 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த ஒன்றிய பி.ஜே.பி. அரசு  அவசரம் காட்டுகிறது; பொதுமக்கள் வரும் தேர்தலில் பி.ஜே.பி. அரசுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற் படுத்தி, தொடர் போராட்டங்கள் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA2019) நடைமுறைக்கு வருவதாக நேற்று (11-3-2024) மாலை இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அறி வித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளை வெளி யிட்டு, நடைமுறைக்கு வருவதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பேச்சு 
வந்த முதலே நாட்டில் கடும் எதிர்ப்பு!
2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலிருந்தே கடும் கண்டனங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் சந்தித்து வரும் இந்தச் சட்டத்தைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் இந்த நேரத்தில் திடீ ரென அமலுக்குக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள்.
அறிவார்ந்த விவாதத்திற்கும், மக்களின் கருத்தறியும் ஜனநாயகத்திற்கும் கிஞ்சிற்றும் இடமில்லை என்ற பாசிசப் போக்கைத் தான் பா.ஜ.க. வெளிப்படையாகக் கடைப்பிடித்து வருகிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்தியாவின் மாபெரும் ஊழல் அம்பலத் திற்கு வந்தது, உச்சநீதிமன்றம் இதில் கடுமையாக உறுதி காட்டிவரும் வேளையில், குறிப்பாக, தேர்தல் பத்திரங்கள்  குறித்த விவரங்களை வெளியிடாமல் மறைத்துவந்த இந்திய ஸ்டேட் வங்கிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து, உடனடியாக விவரங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிட ஆணையிட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்குக்குக் கிடைத்த சம்மட்டி அடியாகவே உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கருதத்தக்கதாகும்.
திசை திருப்பும் யுக்திகளும் – 
அறிவிப்புகளும்!
மக்களிடம் இது தொடர்பான விவாதம் கடந்த சில நாள்களாக எழுந்துள்ள நிலையில் அதைத் திசை திருப்பும் வகையிலேயே, தேர்தல் ஆணையர் பதவி விலகல் என்றொரு செய்தி, தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில், அதாவது நேற்று மாலை 5 மணிக்குப் பிரதமர் நாட்டு மக்களிடம் பேச உள்ளார் என்று ஒரு செய்தியைப் பரப்பினார்கள். ஒரு நாட்டின் பிரதமர் அந்நாட்டு மக்களிடம் பேச உள்ளார் என்பதை பீதிக் குரிய ஒன்றாக மாற்றியிருப்பதும் பாஜகவும், மோடியும் ஈட்டியிருக்கும் நற்பெயருக்குச் சான்றுகளாகும். இந்திய பாதுகாப்புத் துறைக்கான ஆராய்ச்சி அமைப்பின் கண்டு பிடிப்புகளுள் ஒன்றாக அக்னி-5 மிஷன் திவ்யாஸ்திரா என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை அறிமுகம் என்றார்கள். ஆனால், அது பெரிய அளவில் எடுபடவில்லை.
அதேநேரத்தில் இன்னொரு புறம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பும் வெளியானது. பா.ஜ.க. அரசு எவ்வளவு பயந்துபோயுள்ளது என்பதை, இவர்களின் பதற்றமான இந்த நடவடிக்கைகளே காட்டு கின்றன. எதையாவது முன்னிறுத்தி, மக்களைக் குழப்பு வதும், திசைதிருப்புவதும் மட்டுமே இவர்கள் அறிந் துள்ள அரசியல் தந்திரங்களாகும். தேர்தல் அறிவிக்கப்படு வதற்குள் இனியும் எத்தனை நாடகங்களை அரங்கேற்ற இருக்கிறார்களோ தெரியவில்லை!
அந்தப் பதட்டத்திலும் நல்லதைச் செய்து கவனத் தைத் திசை திருப்புவது என்பதெல்லாம் பா.ஜ.க.விற்குப் பழக்கமில்லாதவை. மோசமான ஒன்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டுமென்றால், அதை விட மோசமான ஒன்றை மக்கள் தலையில் கட்டு என்பது தான் அவர்கள் பின்பற்றும் வழி. அப்படி ஒன்று தான் இப்போது நடந்திருப்பதும்!
பச்சையான மதவெறி சட்டமே!
நாட்டின் குடியுரிமையை மதத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் மோசமான மதவெறிச் சட்டம் தான் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கொண்டு வந்துள்ள குடியுரி மைத் திருத்தச் சட்டமாகும்! பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாத இந்து, கிறிஸ்துவர், சீக்கியர்,  சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வகை செய்கிறது இந்தச் சட்டம்.
அண்டை நாடுகளின் அரசுகளால் மத ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிக்கவே இந்தச் சட்டம் என்றால், மியான்மாவில் கடும் பாதிப் புக்குள்ளான ரோஹிங்கியாக்களுக்கும், பாகிஸ்தானின் அஹமதியாக்களுக்கும், ஷியா பிரிவினருக்கும், பூடா னில் உள்ள கிறிஸ்துவர்களுக்கும் ஏன் இந்தச் சட்டம் இடம் தரவில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
2014 டிசம்பர் 31 வரை அதாவது சட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட காலப்படி 6 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தவர்களுக்குக் கூட குடியுரிமை வழங்க வகை செய்த இந்தச் சட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இனப் படுகொலையைச் சந்தித்து, கடும் இன்னல்களுக்கிடையில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, படகுகளில் பயணித்து, தாய்த் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்து, இங்கேயே அகதிகளாக மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தச் சட்டம் வகை செய்யவில்லையே, ஏன்? வாரம் இரண்டுமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, தமிழையும், தமிழர்களையும் நேசிப்பதாக பம்மாத்து காட்டும் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு தெரியாதா? அவர்கள் பட்ட இன்னல்களை அறியாரா? தமிழர்களுக்கு ஏன் இந்தப் பாராமுகம்?
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.வும், பா.ம.க.வும்!
இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்பு கள் அனைவரும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். எதிர்த்து வாக்களித்துள்ளனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆம் பிரிவுக்கு இது முற்றிலும் எதிரானது என்று தெரிந்தும், நாடாளு மன்றத்தின் மக்களவையில் தங்களுக்கிருக்கும் மிருக பல மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, இந்த மசோதாவை வெற்றிபெற வைத்தது பா.ஜ.க.
மாநிலங்களவையில் அ.இ.அ.தி.மு.க.வின் 10 எம்.பி.க் களும், பா.ம.க.வின் ஒரு எம்.பியும் ஆதரவளித்த காரணத்தால் மட்டுமே, இந்தச் சட்டம் நிறைவேறியது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், சிறுபான்மை மக்களுக்கும், தமிழர்களுக்கும், இந்த வரலாற்றுத் துரோகத்தைத் தெரிந்தே செய்தவர்கள்  அ.இ.அ.தி.மு.க. தலைமையும், பா.ம.க. தலைமையும்தானே!
இந்தச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட 2019 டிசம்பர் முதலே, திராவிடர் கழகம் தனது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்  திராவிடர் கழகமே ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்டோருடன் இணைந்து மக்களிடம் கருத்துகளை எடுத்துச் சென்றது.
தொடக்கத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் – 
கண்டனப் பேரணிகள்!
2019 டிசம்பர் 23 அன்று மாபெரும் பேரணியை, திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், காங் கிரஸ், ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சியினரும் இணைந்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் எழுச்சிகரமாக சென்னையில் நடத்தின. பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பை, கண்டனத்தைப் பதிவு செய்தன. நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோவிட் பெருந்தொற்று போன்ற காரணங்களால் அப்போது ஒத்திவைக்கப்பட்ட போராட்டங்களை மீண்டும் இந்த தேர்தல் நேரத்தில் தூண்டி, அமைதிக்குக் குந்தகம் விளவிக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு என்னும் கேள்வி தவிர்க்க முடியாததும், பொருள் பொதிந்ததும் ஆகும்.
நீதிமன்றங்கள் தொடர்ந்து குட்டு வைத்தாலும் – ஒன்றிய பி.ஜே.பி., அரசு திருந்தியபாடில்லை!
அடக்குமுறைக்கு மேல் அடக்குமுறையாக, பாசிசத் திற்கு மேல் பாசிச நடவடிக்கையாகத் தொடர்ந்து செயல் பட்டு வரும் அரசின்மீது நீதிமன்றங்கள் தொடர்ந்து குட்டு வைத் தாலும், இறுதியாக மக்கள் மன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு, இந்த எதேச்சதிகார அரசுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கேட்க வேண்டிய இந்த நேரத்திலும், கடைசி கடைசி யாகத் தங்களின் ஆர்.எஸ்.எஸ்.-இந்துத்துவப் பிரிவினை வாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வேகமாக முனைகிறார்கள் என்றால் தோல்வி பயம் அவர்களைக் கடுமையாகப் பிடித்து ஆட்டுகிறது என்றே பொருள். அதை உண்மையாக்க வேண்டியதும், இது வரை கண்டிராத அளவில் பா.ஜ.க.வை அரசியலி லிருந்து துடைத்தெறிய வேண்டியது ஜனநாயகத்தையும், இந்திய நாட்டையும் விரும்பும் குடிமக்களின் கடமையு மாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13-3-2024